#🙏பெருமாள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் ஸ்ரீ கண்ணபுரநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் திருக்கோயில் .
.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் ஆகும். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது.
.
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர்.
.
மூலவர்: நீலமேகப்பெருமாள்.
உற்சவர்: சவுரிராஜப்பெருமாள்.
தாயார்: கண்ணபுரநாயகி.
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
.
இத்தலத்தில் உள்ள உற்சவர் ‘சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி' என்றும், ‘அழகு' என்றும் பொருள்கள் உண்டு.
.
7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.
======================================
பெரியாழ்வார் பாசுரம்:
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாரவே... !!!
ஓம் நமோ நாராயணாய.✍🏼🌹
Sent from WhatsApp
wa.me/917871107610?source=exsh