நாளைக்கு மறுநாள் ஓட்டு போட எடுத்து செல்லும் போது கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
1, ஓட்டு போட எடுத்து செல்லவேண்டிய அடையாள ஆவணம்
2, சிறிய பெட் பாட்டிலில் தண்ணீர்
3, தேவை இருப்பின் குடை
4, முடிந்தால் வீட்டிலேயே மொபைலை வைத்துவிட்டு செல்லலாம்
5, தேர்தல் இணைய தளத்தில் நமது வாக்கு சாவடியில் உள்ள கூட்டம் Q நீளம் குறித்தும் பதிவு செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன் முடிந்தால் அதனை கண்டு தகுந்த நேரத்தில் செல்லலாம்
6, கூடிய வரையில் காலையில் வெயில் தொடங்கும் முன் அல்லது வெயில் முடியும் வேளையில் வயதானவர்கள் ஓட்டளிக்க செல்லலாம் அவர்களுக்கு Q கிடையாது சீக்கிரமே ஓட்டளித்து வரலாம் ( மூத்த குடிமக்கள் ஓட்டு குறித்து முன்பே தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து வீட்டிலேயே வாக்களித்த மூத்த வாக்காளர்களுக்கு சபாஷ்)
7, கூடிய வரையில் குடும்பமாக சென்று ஓட்டளித்து வருதல் நன்று
8, எக்காரணம் கொண்டும் யாருக்கு ஓட்டு போட்டோம் என்று கூற கூடாது
9, வாக்கு சாவடி முன்பு சென்ற முறை செல்ஃபி பூத் வைத்திருந்தனர் அங்கே மட்டுமே புகைப்படம் எடுங்கள் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம்
10, ஓட்டளித்து விட்டு அங்கேயே சாவடியில் நின்று சாவகாசமாக அரசியல் பேச வேண்டாம் அது தவறு
11, ஓட்டு போடும் போது பீப் ஒலி வருகிறதா.? நமது பதிவு சரியான சின்னத்திற்கு வேட்பாளருக்கு சென்றுள்ளன என்பதையும் சரி பாருங்கள் (அதுவும் காட்டும் ஒரு தனி இயந்திரம் உண்டு)
12, ஓட்டளித்து வந்த பின்பு எடுத்து சென்ற ஆவணங்களை மறக்காமல் அதனை எடுத்த இடத்திலேயே பத்திரமாக வையுங்கள்.
நன்றி
கட்டாயம் தவறாமல் ஒட்டளிப்போம்
#😇Take care Quotes📜