🙏திருச்சிற்றம்பலம்
🙏இரண்டாம் திருமுறை
🙏பாடல்
நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவி
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே.
பாடல் விளக்கம்:
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மத யானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித் தவழ்ந்து வரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ள திருச்சாய்க்காடு ஆகும்.
#🙏ஆன்மீகம்