sivasenthil
535 views
22 hours ago
🙏திருச்சிற்றம்பலம் 🙏இரண்டாம் திருமுறை 🙏பாடல் நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவி சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித் தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே. பாடல் விளக்கம்‬: நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மத யானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித் தவழ்ந்து வரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ள திருச்சாய்க்காடு ஆகும். #🙏ஆன்மீகம்