-
577 views
1 days ago
பகல் முழுக்கக் காத்திருந்து உன்னைப் பார்க்க வந்தேன்... ஆனால், நீயோ பேசாமல் மௌனமாக மேகக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொள்கிறாய்! உனக்குத் துணையாக நான் வரவில்லை என்றா? உன் அவசர தேவைக்கு நான் உதவவில்லை என்றா? வருத்தம் வேண்டாம் என்னுடைய இந்த நிலையும் மாறும், அன்று ஓடோடி வந்து நிற்பேன் உனக்கு உதவுபவனாக, அது வரை சினம் கொள்ளாதே, முழு நிலவாய் சிரித்தவள் இன்று என் முகம் பார்க்காமல் கோபமாய் இருப்பது ஏனோ? உன் மௌனம் கலைத்து ஒருமுறை பேசு... உன் குளிர்ச்சியில் என் கவலைகள் கரையட்டும்! உன் கோபம் நியாயம் தான் என்றாலும், உன் தோழனின் பாசத்தைப் பார் என் நிலாவே! நிலாவின் பதிலை எதிர்பார்த்து...‌ #💖நீயே என் சந்தோசம்🥰