அன்புமணி ராமதாஸ்
565 views
5 days ago
ஆணைகவுண்டனூர் வை.மாணிக்கம் மறைவுக்கு இரங்கல். ஈரோடு மாவட்டம், ஆணை கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் வை. மாணிக்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த மாணிக்கம் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பங்களித்துள்ளார். சங்கம், கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். ஆணை கவுண்டனூர் மாணிக்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0