🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருவருட்பா🌹🙏*
*☀️திருமுறை2️⃣☀️*
*🦚இரண்டாம் தொகுதி🦚*
*🌹புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்🌹*
*🌷திருவொற்றியூர்🌷*
_🌻அஃதாவது புணர்ந்து இன்புறுத்துவார் போலப் பயின்று புணரா தொழுகும் சூழ்ச்சியை இறைவன் மேற்கொள்ளுதலால், பெருந்திணை நங்கை வேட்கை மீதூர்ந்து ஆற்றாமையால் தோழிக்குச் சொல்லி வருந்துவதாம். புணரா விரகு - புணரா தொழுகும் சூழ்ச்சி. பொருந்துறு வேட்கை, புணராமையால் உள்ளத்தில் தோன்றி மிகும் வேட்கை. வேட்கை மீதூர்தலால் “விண்ணினைக் குத்தி மெய்யிளைப்பவர் போல்” மெலிவுற் றுரைத்தல், வேட்கையின் இரங்கல் எனக் குறிக்கப்படுகிறது._
*🦚பாடல்:1628///5818🦚*
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
🌹பெற்றம் இவரும் பெருமானார்
பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
உற்ற சிவனார் திருஒற்றி
யூர்வாழ் உடையார் உற்றிலரே
எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள்
ஏறாமட்டும் ஏறுகின் றாள்
செற்றம் ஒழியாள் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*விளக்கம் :*
*எருதேறும் பெருமானும், பிரமதேவனும் அறியமாட்டாத பேரொளிப் பொருளாகிய சிவபெருமானும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவனுமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வந்தாரில்லை; அதன் விளைவை என்னென்பேன்; என் செவிலித்தாய் தன் வாய் கொண்ட மட்டும் பேசி யேசுகிறாள்; சினம் சிறிதும் தணியாளாகின்றாள்; இதனால் செய்வதறியாது திகைக்கின்றேன்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🦚🔥வள்ளலார்🔥🦚*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
#🙏ஆன்மீகம்