𝐑𝐚𝐣𝐭𝐞𝐜𝐢𝐧𝐟𝐨
569 views
11 hours ago
தமிழகத்தில் பிளஸ் 2 முடிவுகள் நாளை (மே 8, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள அலைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசியத் தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைக் கட்டணமில்லாமல் பார்த்துக் கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் 7845252525 என்ற எண்ணிற்கு Hi அனுப்பி துறை மற்றும் வகுப்பு விவரங்களை வழங்கி, பின்னர் பதிவு எண், பிறந்த தேதியை கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பொது நலன் கருதி வெளியிடுவோர் "RAJTECINFO TAMIL" தமிழ் தொழில்நுட்ப சமூக வலைதளம்.. #பிளஸ் டூ தேர்வு முடிவு நாளை வெளியாகிறது!