Samsudeen
666 views
2 days ago
*அரசியல் புரிதல்கள்..!* *கப்ளிசேட்* ⚖️🔮 *அரசியல் புரிதல் -3* *இங்கு யாரும் ஹீரோவும் இல்லை!* *இங்கு யாரும் ஜீரோவும் இல்லை!* கிராமங்கள் தோறும் கட்டமைக்கப்பட்ட கட்சிகளின் அமைப்புகளில் வார்டு,வட்டம்,பகுதி, எனவகை வகையான பதவிகள் உருவாக்கப்பட்டது. இளைஞர்அணி, மாணவரணி, மகிளிரணி, என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன. அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். எல்லோரையும் கட்டி மேய்க்க காசு வேண்டும். யாரும் காசு இல்லாமல் ஒருவேளையும் செய்யமாட்டார்கள். அப்போது எழுதப்படாத சட்டமாக நடைபெறும் வேலைகளில் இத்தனை சதவீத கமிஷன்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டன. ஒன்றிய, மாநில அரசுகளிடம் இருந்து ஒதுக்கப்படும் நிதிகள் எல்லா மேசைகளையும் தாண்டி அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களின் பாக்கெட்டை நிறைத்து விட்டு, ஒரு திட்டமாக நிறைவேற்றும் போது குறைமாத பிரசவ குழந்தையைப் போல இளைத்து போய்விடுகிறது. அதனால் போடப்படும் ரோட்டில் இருந்து கட்டப்படும் கட்டிடங்கள் வரை மிகக்குறுகிய காலத்தில் எல்லாம் அதன் தரங்களை இழந்து விடுகின்றன. ஒரு கட்டிடத்தை பார்த்தவுடன் இது அரசாங்க கட்டிடம் என பட்டென்று சொல்லி விட முடிகிறது. கட்டிய புதிதில் புதுப்பெண்ணாய் மின்னுகிற கட்டிடங்கள், மிகக்குறுகிய காலத்தில் விதவைப் பெண்ணாய் ஒளியிழந்து போகின்றன. அதன் பொறுப்பாளர்களாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் மின்ன ஆரம்பித்து விடுகின்றன. இதற்காகவே ஆளுங்கட்சிகளில் ஏராளமான வண்டுமுருகன்கள் சுற்றி வருகின்றனர். இந்தமாதிரி அரசியல் வாதிகளிடத்தில் கொள்கையெல்லாம் ஒன்றும் இல்லை. ஒருகாலத்தில் தன் தலைவர் ஆட்சிக்கு வரும்வரை சட்டை அணிய மாட்டேன் செருப்பு அணிய மாட்டேன் என்று சூளுரைத்து வாழ்ந்த கொள்கை வாதிகளும் இருந்தார்கள். தங்கள் சொத்துக்களை விற்று கட்சிக்கு செலவு செய்தவர்களும் இருந்தார்கள். இப்போது அப்படியெல்லாம் இருந்தால் அவர்களை அக்மார்க் பைத்தியகாரர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் இப்போது அடுத்த கட்சியில் அதிகப்பயன் என்றால், எத்தனை ஆண்டுகள் இந்த கட்சியின் மூலம் பயனடைந்ததை மறந்துவிட்டு, தண்ணீரும், மீனும் இல்லை என்று தெரிந்தால் அடுத்த வளமான குளத்தை நோக்கி பறந்துவிடும் பறவைகளைக் போல பறந்து விடுகின்றனர். கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை இதுதான் களத்தின் எதார்த்தமான நிலை. இதற்காகவே அரசாங்கத்தில் ஏராளமான குழுக்கள், வாரியங்கள் என அரசியல் வாதிகளுக்கு ஏகக் கொண்டாட்டத்தை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். ஆகவே ஆட்சியிலிருக்கும் கட்சிகள் தங்கள் தொண்டர்களை தாராளமாக கவனித்து கொள்கின்றன. இதில் அரசாங்க அலுவலகங்களில் வேலைகளை முடித்துக் கொடுக்க புரோக்கர்கள் டீமே இயங்குகிறது. நீங்கள் போய் என்ன அலைந்தாலும், நடக்காத வேலை ஒரே போன்காலில் நடந்து விடும். சொன்ன இடங்களில் நீங்கள் அன்பளிப்புக்களை மட்டும் கொடுத்துவிட்டால் போதுமானது. இதுபோன்ற நிலைகளை பொதுமக்கள் அறிந்து கொண்டால்தான் அரசியல்வாதிகளின் சங்கேத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் விளங்கும். இப்போதெல்லாம் அன்பளிப்புகளில் நவீன Trend கள் புகுந்துவிட்டன. அரசியல் அசிங்கமா? *தொடர்ந்து ஆறு நாட்கள் கொஞ்சம் அரசியல் பேசுவோம்..!* ⚖️🔮 *கப்ளிசேட்* *18.04.26* #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰