சுப்புராம் முத்துராஜ்
382 views
15 hours ago
२९ ह व्ह्यू · ४३९ प्रतिक्रिया | உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில், திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அருவி. நிறைய பெயர்கள் இருந்தாலும் திருமூர்த்தி அருவி என்று எல்லோராலும் அறியப்படுகிறது. சிமெண்ட் தலம்,கல் படிக்கட்டுகள்,மண் தடம்,பாறைகள் என கடந்து 1.50 கிலோமீட்டர் நடந்து அருவியை அடையலாம், இந்த அருவியானது பல வடிவில் வழிந்து ஓடி அடிவாரத்தில் உள்ள கோவிலையை அடைந்த பின் அணையில் சென்று சேரும். நடை பயணத்தின் போது சுற்றிலும் மலைகளும் வழித்து ஓடும் அருவியும் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் அழகாக காட்சி அது. பஞ்சலிங்க கோவில் பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீ மலைப்பாதையில் நடந்து சென்றால், செங்குத்தான பாறைகளில் இருந்து விழும் பஞ்சலிங்க அருவியை அடையலாம். மலையேற்றம் (Trekking) விரும்பிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இது ஒரு சிறந்த இடமாகும். அருவியில் தண்ணீர் ஒரே மாதிரி வருவது இல்லை காலநிலை பொறுத்து அருவியின் தண்ணீர் விழுவது மாறுபடும்.தண்ணீர் அதிகமாக வரும் போது அருவிக்கு செல்ல அனுமதி கிடைக்காது. அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கு பஞ்சலிங்க அருவியில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் வால்பாறை சின்னகல்லாறு, நீராறு தொடங்கி பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து கால்வாயை மூலம் கொண்டுவரும் தண்ணீர் என இரண்டு முக்கிய நீர் ஆதாரமாகும். இந்த அணையின் நீர் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது மற்றும் மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது. ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்., அன்புடன் ஆரோ.செல்வா... Aro Selvaa Ride @top fans | Aro Selvaa Ride
உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில், திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அருவி. நிறைய பெயர்கள் இருந்தாலும்...