பகவத் கீதை அமுத அலைகள் - 10
அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே
த்யக்த ஜீவிதா: !
நானா சஸ்த்ர ப்ரஹரணா: ஸர்வே
யுக்த விசாரதா: !!
துரியோதனன் தொடர்கின்றான்:
'என்னுடைய படையில் இன்னும் பல வீர சாஹஸர்கள் உண்டு.
என் பொருட்டு உயிரைத் தியாகம் செய்திடக் கூடத் தயங்காதவர்கள்.
பல வித ஆயுதப் பிரயோகங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த போர் அனுபவங்கள் படைத்தவர்கள்."
துரியோதனனுக்கு தன்னுடைய வெற்றி மேல் பூரண நம்பிக்கை இல்லாததனால்,
தன் பாதுகாப்பிற்காக தம்முடைய உயிர்களைத் தியாகம் செய்யத் தயாரானவர்களையே அதிகம் போரில் நம்பியிருந்தான்.
என்னுடைய வீரர்களைக் காப்பாற்ற என்னுடைய உயிரைக் கூடத் தியாகம் செய்வேன் என்று ஒவ்வொரு பாண்டவர்கள், அவர்கள் படை அரசர்களும், உறுதி பூண்டிருந்த போது,
என் பொருட்டு என்னுடைய படையின் வீரர்கள் தத்தம் உயிரைத் தியாகம் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பது,
துரியோதனனின் அளவற்ற சுயநலத்தையம் தன்னுடைய படை வீரார்களின் ரக்ஷ்ணம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாததையும் வெளிக்காட்டுகின்றது.
"வராமல் ஓடிடும் துன்பங்கள் - பூ
வராகன் கடைக்கண் அருள் படிந்தால்"
#🙏பெருமாள் #📸பக்தி படம் #🙏ஏகாதசி🕉️ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள்