*#கண்ட்ரோல்தரும்ஆவி #ஒழுங்கின்மையின்தேவன்அல்ல #கலகத்தின்தேவன்அல்ல #கட்டுக்கடங்காமை #இன்றுநடக்கும்அற்புதங்கள் #கடவுள்செய்வதுஅல்ல #மேட்ரிக்ஸ்* *#பரிசுத்தஆவியின்அதிசயவரங்கள் #முன்னறிவித்ததுபோலவேவரம்நின்றுபோனது #வரம்நின்றுபோனதுகிபி150 #பரிசுத்தஆவியின்அபிஷேகம் #பரமஅழைப்பு*
தேவனின் *இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கிற வேலையை அச்சமின்றி செய்ய திருச்சபைக்கு பரிசுத்த ஆவி தெம்பு அளிக்கிறது* (அப்போஸ்தலர் 2:8-11; 4:31). முதலாம் நூற்றாண்டில் திருச்சபையார் கிறிஸ்துவின் இராஜ்ய நற்செய்தியை உலகமெங்கும் பரப்பும் பொருட்டு, அந்த செய்தியை நிரூபிக்க (குணமளித்தல், வேற்று மக்கள் பாஷை பேசுதல் போன்ற) சக்திவாய்ந்த அடையாளங்கள் செய்ய, *அந்த காலத்தில் திருச்சபைக்கு ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்தார்* (1 கொரிந்தியர் 12:8-10).
வேதாகமம் (1 கொரி 13:8) முன்னறிவித்தது போலவே, அப்போஸ்தலர்கள் எல்லாரும் இறந்தபின், *2-ஆம் நூற்றாண்டிற்குள் அதிசய வரங்கள் யாவும் நின்றுபோயின.* விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய இம்மூன்று வரங்களே இன்றளவும் நிலைக்கும் ஆவியின் வரங்கள் என்று பவுல் எழுதுகிறார் (1கொரி 13:13). அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோயின என்றால், *இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் செய்யப்படும் அற்புதங்கள் எல்லாம் தேவனால் நடப்பது அல்ல என்பதும் சாத்தானே அவற்றின் பின் இருக்க முடியும் என்பதும் புரிகிறது." ‘அது *ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே' (2கொரிந்தியர் 11:14).* இப்படிப்பட்ட அற்புதங்களை தன் பெயரில் செய்வார்கள் என இயேசு முன்னறிவித்தார் (மத்தேயு 7:22-23). அப்படி நடக்கையில் சாத்தானின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் (மாற்கு 3:23-26). *சாத்தான் 2000 வருடங்களாக தன்னுடைய எல்லாவித தந்திரங்களையும் நடப்பித்து முடித்துவிட்டான்.* தற்போது இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்து மக்களை தவறாக திசைதிருப்ப ஒரு *கடைசி சூழ்ச்சியில் இறங்கியுள்ளான்.*
இந்த அற்புதங்கள் உண்மையில் சாத்தானிடமிருந்துதான் வருகின்றன என்பதை தெளிவாக காட்டும் வேறு விசயங்கள் உள்ளனவா?
அப்போஸ்தலர் பவுல் *சபைகளில் அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டால் அந்நியபாஷை பேசக்கூடாது என்கிறார்.* ஏனெனில் அவிசுவாசிகள் யாரேனும் உள்ள நுழைந்து சபையார் *அர்த்தமற்ற சொற்களை உளறிக்கொண்டிருப்பதை கண்டால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்துவிடுவார்கள் என்கிறார் (1கொரிந்தியர் 14:6-28).*
தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். *தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்." 1கொரிந்தியர் 14:29-33.*
சபைகளில் நிதானமும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நம் "தேவன் கலகத்திற்கு தேவனாயிரார்." "தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே," என்கிறார் பவுல். *ஆம், மெய்யான தேவன் அளிக்கும் வரங்களினால் யாரும் சுய கட்டுப்பாட்டை இழப்பதில்லை!*
அவர் சபையில் அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் முறை வரும்போது பேசவேண்டும் என்றும், எல்லாரும் ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.
சரி, *இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் ஒன்றிற்கு நாம் சென்றோமானால், என்ன காண்கிறோம்? - மக்கள் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அர்த்தமற்ற சொற்களை உளறுவதையும், ஒரே நேரத்தில் பலர் இரைச்சல் போடுவதையும், சுய கட்டுப்பாடு இல்லாத ஆட்டங்களையும், இவ்வகையான பல கூத்துக்களையும் பார்க்கிறோம். என்னவொரு ஒழுங்கற்ற கலகமான காட்சி!
கலகத்தின் தேவன் யார் என சற்று சிந்தியுங்கள்? ஆம் உண்மையில் அது சாத்தான் தான். இவை எல்லாம் அவனுடைய வல்லமையின் பயன்களே!*
நிச்சயம் பரிசுத்த ஆவியின் வல்லமையின் பயன்கள் அல்ல.
அடுத்த கேள்வி: 'அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.' மத்தேயு 3:11. அக்கினியினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் என்றால் என்ன?
#🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴