B. CELLIN
992 views
18 hours ago
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இணைந்து செபிப்போம்* *ஆண்டவரே இயேசுவே, நல்லவரே; நேர்மையுள்ளவரே! உம்மை ஆராதிக்கிறேன். நல்வழிகள் கற்பித்து, உமது அன்பில் வாழ, வல்லமை தந்து வழிநடத்துவதற்காக நன்றி கூறுகிறேன். "கடவுளை முழு இதயத்தோடும்; முழு அறிவோடும்; முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல்; அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவது; எரி பலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாய் கற்பிக்கின்றீரே. இயேசுவே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! 'ஏனெனில்; அன்பு கடவுளிடமிருந்து வருகிறது' என்பதை மனதில் இருத்தியவனாய், மற்றவர்களை அன்பு செய்து, விண்ணகத் தந்தையின் பிள்ளையாக வாழ அருள் கூருமப்பா. உமது அன்புக்குள் வளர, எந்நாளும் என்னை வழிநடத்தும் தந்தையே.* *ஆண்டவரே இயேசுவே! “ஆழ்ந்த அன்பு திரளான பாவங்களைப் போக்கும்” என, உமது வார்த்தை கற்றுத்தந்ததை, நான் என் மனதில் கொண்டு வாழ்ந்து, என் பாவங்களில் இருந்து விடுதலை பெறும் ஆற்றலைத் தாரும் அப்பா.* *அன்பின் இணைப்பான மூவொரு இறைவனே! நானும் என் அயலாரை அன்பு செய்து வாழ்ந்து, உமக்கு உகந்த பிள்ளையாக என்னாளும் உம் அன்பில் வளர்த்திட அருள் தாரும். 'என் மீது அன்பு கொண்டு, என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு; ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்' என்றவரே, இன்றைய நாளில் உமது கட்டளையைக் கடைப்பிடித்து; அறிவுத் தெளிவோடு வாழவும், அனைவரையும் அன்பு செய்து வாழவும்; பாவத்தை விலக்கி வாழவும் வரம் தரவேண்டும் என்று, இயேசு என்ற பரிசுத்த நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.* நன்றி - தமிழ் ஆன்மீக பணியகம்