💙🪈Krish💜🪈
1.4K views
5 days ago
தேனீ மாவட்டம் உத்தமப்பாளையம் தாலுகா கம்பம் பள்ளத்தாக்கு அருகில் காமயகவுண்டன் பட்டியை (k.k.patti) சேர்ந்த தேனி மாவட்டம் இந்திய இராணுவ வீரர் மதிப்பிற்குரிய "தேச விசுவாசி" லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள்.. நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்... தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது முகம் மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி... பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி.. இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது... இது தேனி மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமையை சேர்க்கும் தருணமாகும்... வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்... "நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள்...! Salute. 👍👍 ஜெய் ஹிந்த் 👌👌 நன்றி. Yours Krish 👍👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🇮🇳ராணுவம்: நமது தேசத்தின் பெருமை💪 #🙏என் தேசப்பற்று #I ❤️‍🔥 Indian Army🦾

More like this