#ரத்தக்கண்ணீர்
நாகரிகம் என்னும் பெயரில் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட ஒரு மனிதனின் கதையே `ரத்தக்கண்ணீர்'. எம்.ஆர்.ராதா தனது அறிமுகக் காட்சியிலேயே அந்தப் பணக்காரத் தோரணை, திமிர் என நடிப்பில் அசத்தியிருப்பார். படத்தில் வரும் வசனங்களை எழுதிய திருவாரூர்.கே.தங்கராசு, பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அந்தத் தாக்கம், `ரத்தக்கண்ணீ'ரில் வரும் வசனங்கள் அனைத்திலும் வெளிப்படும்.
ஒரு காட்சியில், `ஜீவகாருண்யக் கட்சியைச் சேர்ந்தவங்களா? அப்படின்னா என்னப்பா அர்த்தம்?’என்று எம்.ஆர்.ராதா கேட்க, `நாங்க உயிர்களைக் கொல்லமாட்டோம்’என்று அவர்கள் சொல்ல, `ஓஹோ.. ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?’ என்று நக்கலடிப்பார், ராதா. இப்படிப் பல வசனங்கள் மூட நம்பிக்கையைக்கு எதிராக நிற்கும். இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் பழைய படத்தைப் பார்க்கும் உணர்வு வராது என்பதுதான், இப்படத்தின் அதிசிறப்பு.
#😍Old மூவிஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா