வித்தியாசமான காஞ்சிபுரம் இட்லி !!

இட்லியில் எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமானது, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இங்கு அந்த வித்தியாசமான காஞ்சிபுரம் இட்லியை எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1ஃ2 கப்
கடலைப் பருப்பு - 1ஃ2 டீஸ்பு+ன்
தயிர் - 1 கப்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய - 3 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி - 1 டீஸ்பு+ன் (நறுக்கியது)
மிளகுத் தூள் - 1ஃ2 டீஸ்பு+ன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பபிலை - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
🍚 முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, கிரைண்டரில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
🍚 பின்பு அதனை 6 - 8 மணிநேரம் மாவைப் புளிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
🍚 இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி தயார்!!!
#⚡ஷேர்சாட் அப்டேட்