N.Ramachandran
472 views
2 days ago
https://youtube.com/watch?v=M4ihwGrLIOE&si=dR7IBVxHoM59yTKt 🕉️✡️ சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை 2026 பற்றிய விளக்கம். ✡️🕉️ பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை வேத தர்ம ஸாஸ்திரத்தில் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய யுகங்களில் மனிதப் பிறவிகளாக பிறந்த எந்த வர்ணக் காரர்கள் சித்ரகுப்தனாக இருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் தான் தானங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் பதிவிட இருக்கின்றோம். இந்த வீடியோ பதிவானது சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தனாக கலியுகத்தில் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு தஸ 10 தானங்களை கொடுப்பதால் எந்தெந்த பாவங்கள் நம்மை விட்டு விலகும் எந்தெந்த பாவங்கள் நம்மை விட்டு விலகாது என்பதை பற்றிய முழு விளக்கம். ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து இந்நன்னாளில் அதன் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு வேதம் படித்த வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து நினைத்து கொண்டு அவர்களுடைய பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் பெற்று தாங்களுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நம்மை விட்டு விலகக் கூடிய பாவங்கள்: குல தெய்வம் வழிபாடு செய்யாமல் இருப்பது, பித்ரு சாபம் விலகுவது, குரு த்ரோகம் செய்த பாவம் விலகுவது தினந்தோறும் நம்மை அறியாமலேயே செய்த பாவங்கள் விலகுவது, முற்பிறவியில் செய்த பாவங்கள் விலகுவது, மேற்கூறிய பாவங்கள் அனைத்தும் தஸ 10 தானங்கள் செய்வதால் படிப்படியாக நாம் செய்த பாவங்கள் நீங்கும். தஸ 10 தானங்கள் செய்தாலும் தீராத பாவங்கள்: நமது க்ரஹத்தில் இல்லத்தில் தினந்தோறும் பூஜை அறையில் அதிகாலை, மாலை வேளையில் ஸ்வாமிக்கு விளக்கேற்றாமல் இருப்பது, காலை வேளையில் மட்டும் ஸ்வாமிக்கு பூஜை செய்யாமல் நமது சௌகரியத்திற்கு ஏற்றார்போல் ஸ்வாமிக்கு பூஜை செய்வது, நமது க்ரஹத்தில் இல்லத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யாமல் கோயிலுக்கு செல்வது, புருஷர்கள் ஆண்கள் ஸ்த்ரீகள் பெண்கள் நம்மை ஈன்றெடுத்த தாயாரையோ தகப்பனாரையோ அவர்களை நாம் காப்பாற்றாமல் தனியே விடுவது, நம்மை நம்பி வந்த மனைவியை கைவிடுவது, நம்மை நம்பி நமது ஆத்மாவிற்கு மிகவும் பிடித்தவருக்கும், நம்மிடம் பணி வேலை செய்யும் பணியாளர்களுக்கும் நாம் த்ரோகம் செய்வது, மனைவி தனது கணவருக்கு த்ரோகம் செய்வது, கர்பத்திலேயே ஸிஸுவை அழிப்பது, குடும்பத்தை பிரிப்பது, சுய நலத்திற்காக சொந்த பந்தங்களை பிரிப்பது, ஸ்த்ரீகள் பெண்கள் சிறு வயது முதல் அடுத்தவருடைய மனைவி வரை பலவந்தமாக பலாத்காரம் செய்வது, அடுத்தவருக்கு உரிமையாக இருக்கும் அனைத்து சொத்துக்களையும் அபகரிப்பது, அனைத்து உயிர் பிராணிகளையும் அதாவது ஆடு, மாடு, கோழி, மனிதப் பிறவிகளை வதம் செய்வது கொண்று போடுவது, மாமிசங்களை சாப்பிடுவது, தேசத்தை ஆட்சி செய்ய கூடிய ராஜாக்கள் நாட்டு ப்ரஜைகளை வரிமேல் வரி போட்டு ஹிம்ஸை செய்வது, சொந்த தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் அதிகமாக லாபத்தை ஈட்டி அதை லாபம் இல்லாதவாறு கணக்கு காட்டுவது ஆகிய இத்தனை பாவங்களுக்கும் தஸ 10 தானங்கள் செய்தும் ப்ரயோஜனம் இல்லை. இது போன்ற பாவங்கள் எக்காலத்திலும் நம்மை விட்டு விலகாது. தஸ 10 தானங்களை கொடுத்தும் விலகாத ஏதேனும் ஒரு பாவங்களை நாம் செய்து விட்டு கோயில்களுக்கு ஆலயங்களுக்கு சென்று இறைவனை குளிர் படுத்தினாலும் இறைவன் நம்மை மன்னிக்கமாட்டார் நாம் கேட்கும் வரங்களையும் வழங்க மாட்டார். கங்கா யமுனா கோதாவரி ஸரஸ்வதி நர்மதை சிந்து காவேரி சரயு நதிகளில் ஸ்நானம் செய்தாலும் நதிதீர தேவதைகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள். மீண்டும் சொல்கிறேன் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணருக்கு தானங்களை கொடுத்து தாங்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள். 🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி