பழைய பேப்பர்!
பிரசாந்த் பாணியில் ரவி மோகன்!
மனைவி ஆர்த்தியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ரவிமோன். அவருடைய பேட்டியில், ‘’மனைவியால் பாதிக்கப்படும் ஆண்களுக்குத் துணை நிற்பேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்.
இந்த ரவி மோகன் போலத்தான் அதே கருத்தை நடிகர் பிரசாந்த்தும் 18 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். மனைவி கிருகலட்சுமியோடு பிரசாந்த்துக்கு பிரச்னை ஏற்பட்டது. அது கடைசியில் வரதட்சணை புகாராக உருவெடுத்தது. திடீர் திருப்பமாக கிரகலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயம் தெரியவந்தது. ஏற்கெனவே திருமணம் ஆன கிரகலட்சுமி என்னை ஏமாற்றிவிட்டார் என்று பிரசாந்த் வழக்கு போட்டார். அந்த நேரத்தில்தான் மனைவியால் பாதிக்கப்பட்டோர் இந்தியக் குடும்பநலப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. ஆண்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பில் பங்கேற்று பிரசாந்த் குரல் கொடுத்தார். அதே பாணியில் இன்றைக்கு ரவி மோகனும் இறங்கியிருக்கிறார்.
#RaviMohan
#📺வைரல் தகவல்🤩 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴