#மதுரை சித்திரை திருவிழா
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி:
தங்கக் குதிரை ஏறி...
தன்னந்தனிப் பெரும் வீரனாக
வைகை மடியில்
அழகர் கால் பதிக்க...
கூடியிருந்த
லட்சக்கணக்கான உதடுகள்
'கோவிந்தா' என முழங்க,
மதுரை மாநகரமே
வைகையோடு கரைந்தது!
மீனாட்சிக்கு அண்ணன் ...
மதுரைக்குச் சொத்து...
பச்சை பட்டு உடுத்தி
நம் பாவம் தீர்க்க வந்தான்
அந்தக் கள்ளழகன்!
யார் முகத்தைப் பார்த்தாலும்
அதே பரவசம்...
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும்
#கோவிந்தா நாமம்!