சொந்த நாட்டில் CAA என்ற பெயரில் எங்களை அகதிகலாக்க துடிக்கிறான் என்கிற வலி..
ஹிஜாப் எனும் எங்கள் கண்ணியமான ஆடையை அகற்ற சொல்கிறான் என்கிற வலி..
பசு பயங்கரவாதம் என்கிற பெயரில் எங்கள் உணவில் கை வைக்கிறான் என்கிற வலி..
மாட்டுக்கறி வைத்திருந்தான் என எங்கள் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறான் என்கிற வலி..
ஆசையாய் சிறுக சிறுக சேர்த்து கட்டிய எங்கள் வீடுகளை எங்கள் கனவுகளை, புல்டோசர்கள் கொண்டு இடிக்கிறானே என்கிற வலி..
பொதுசிவில் சட்டம் என்கிற பெயரில் எங்கள் மத உரிமையில் கை வைக்கிறான் என்கிற வலி..
வக்ஃபு திருத்த சட்டம் என்கிற பெயரில் எங்கள் சொத்துக்களை சூரையாட போகிறானே என்கிற வலி..
முத்தலாக் என்கிற பெயரில் எங்கள் உரிமையில் உள்நுழைகிறானே என்கிற வலி..
இப்படி இந்த மண்ணில் எத்தனையோ வலிகளைத் சுமந்துகொண்டு ஒரு சமூகம் நிற்க்கிறது...
அந்த வலிகள் என்பது கங்குகள் நிறைந்த நெருப்பைப் போன்றது...
ஒரு சமூகத்தின் வலி என்பது வெறும் வார்த்தைகளல்ல; அது ஆறாத வடுக்கள், தூக்கமற்ற இரவுகள், மற்றும் பறிபோகும் உரிமைகளின் சாட்சியம்...
இத்தனை வலிகளையும் தாங்கி நிற்கும் எங்களுக்கு, இந்த வலிகளுக்குத் தீர்வாக ஒரு "மருந்து" தேவையில்லை...
அந்த வலிகளை எதிர்த்து நிற்கும் ஒரு "வலிமை" தேவை...
அந்தப் போராட்டக் குணமும், பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிச்சலும் பல்லாண்டு காலமாகத் திராவிட மண்ணின் கொள்கைகளில் உறைந்து கிடக்கிறது...
இங்கே எங்களின் இந்த வலிகளுக்கு வழி சொல்லும் ஒருவன் தான் எங்களை ஆள வேண்டுமே தவிர..
ஏற்கனவே அத்தனை வலிகளோடு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என மேடைக்கு மேடை ஒப்பாரி வைப்பவன் எப்படி எங்களை ஆள முடியும்..
விஜய் அவர்களே...
உங்களின் தனிப்பட்ட வலிகளுக்கு இன்னும் நிவாரணம் தேவைப்படும் நிலையில், ஒரு பெரும் சமூகத்தின் பல ஆண்டுகால வரலாற்று வலிகளுக்கு உங்களால் எப்படித் தீர்வு காண முடியும்?
நீங்கள் இப்போதுதான் நடக்கப் பழகுகிறீர்கள். ஆனால், பாசிசத்தின் கோர முகத்தை எதிர்த்து, அறப் போராட்டமும், சட்டப் போராட்டமும், களப்போராட்டமும் நடத்திப் பழகிய ஒரு மாபெரும் இயக்கம் ஏற்கனவே இங்கே இந்த மண்ணில் எங்களோடு தோல் நிற்கிறது...
தற்காலிகக் கவர்ச்சிகளுக்காகவோ, மேடைப் புலம்பல்களுக்காகவோ எங்களின் இந்தப் ஜனநாயக உரிமைக் களத்தை நாங்கள் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது...
"வலிப்பதாகச் சொல்பவர்களுக்கு இங்கே இடமில்லை; எங்களின் வலிகளைத் துடைக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே எங்கள் வாக்கு...
பாசிசத்தை வீழ்த்திப் பழகிய திராவிடக் கரங்களே அந்த திராவிட மாடலே எங்கள் உரிமைகளுக்கான சரியான வழித்தடம்...
மேலாக இறைவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பும் கூட்டம் நாங்கள்...
பதிவு:
#வலிகளோடு
#கூத்தாநல்லூர்_ஜின்னா
#📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪தி.மு.க