கர்நாடகா குஜராத் தெலுங்கானா ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் வேலைகள் அந்தந்த மாநில மக்களுக்கே 100 விழுக்காடு என்றும், இந்திய அரசு பணிகளிலும், தனியார் துறையிலும் 90 விழுக்காடு அந்தந்த மண்ணின் மக்களுக்கு உரியது என்று சட்டம் இயற்றி நடைமுறை ப்படுத்தப்படும் போது தமிழ்நாட்டு மக்கள் உரிமைகள் மட்டும் அனைவருக்கும் சொந்தமானது என்று பேசும் ஒரு சில முற்போக்குவாதிகளின் பேச்சு தமிழ் இனத்திற்கு எதிராகவே அமைந்து வருகிறது.
ஏற்கெனவே ஒரு கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அல்லலுற்று வருகிறார்கள். தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்திற்கு கிடைத்த வேலையை செய்து வரும் மோசமான சூழல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இருக்கும் பணிகளையும் வந்தேறிகளிடம் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு பிள்ளைகள் எங்கே போவார்கள்?
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் இதனை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்கள். மற்ற திராவிட அரசியல் வியாதிகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டுமே போதுமானது என்ற தொனியில் தான் இருக்கிறது.
#🤭அரசியல் மீம்ஸ் #😍HBD சமந்தா ரூத் பிரபு🥳 #👗 Summer ஃபேஷன் ட்ரெண்ட்ஸ் #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #😮விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல நடிகை💔