அத்தியாயம் 87
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்க ...
சிறிது நேரத்தில் தன்னலைக்கு வந்த அவர்களோ ...
அத்தை ஹெலிபோர்ட் ...
விஷ்ணு ... என்று சொல்லிக் கொண்டே ...
அனைவரும் மேல ஓட ..
அதே சமயம் ...
அவனோ காற்றை கிழித்துக் கொண்டு மேகங்களுக்குள் மறைந்து கொண்டு இருக்க ..
அதன் நடுவே அவன் முகம் இறுகியது போல கண்டவர்களுக்கோ .. ஏனோ ! சரி இல்லை என்று தோன்ற ...
என்னங்க இங்கே என்ன நடக்குது ? ..
பயமா இருக்கு... விஷ்ணு எதுக்கு இவ்வளவு கோவமா போறான் ... அது மட்டும் இல்ல .. இவ்வளவு கோபம் படுவனான்னு எனக்கு தெரியல ...
சாரதா கொஞ்சம் அமைதியா இரு ... இன்னிக்கி அவன் இல்ல என்னோட அப்பாவை பார்த்தேன். . ஆர் கே ... என்று சொல்லும் போதே ..
சுற்றி இருந்தவர்களின் கண்கள் விரிய ...
அதே சமயம் ...
அவங்க கை வச்சு இருக்கிறது ...
என் பொண்டாட்டி மேல ... சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு ராவணன் பார்க்கும்போது தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணமே இருக்க ... இதாங்க போன் வந்துகிட்டே இருக்கு ..
ம்ம் ! ...
தேங்க்ஸ் மா ... மொபைலை நீட்ட ...
ம்ம் ! .. என்று சொல்லி விட்டு மொபைலை வாங்கிக் கொண்டு .. வேகமாக அட்டென்ட் செய்து காதில் வைத்த அடுத்த நிமிடம் ! ...
சார் ! ... இப்ப வந்துடறேன் ...என்று சொல்லி விட்டு வைக்க போக ...
அதே சமயம் உனக்கு வேலை இல்ல ..
அது மட்டுமல்ல இந்த மாசம் நீ ஒழுங்கா வரல .... அதனால உன்னோட சம்பளத்தையும் என்று சொன்னதும் ...
சார் ! ... சார் ! ... இத வச்சு நான் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கேன் ...
அப்போது அதிக படபடப்புடன் அந்த வளாகத்திலேயே உள்ள ஐ . சி வாட்டை பார்த்து கொண்டு இருந்த ராவணனும் ... அதைக் கேட்டு ஒரு நிமிடம் திரும்ப ...
அது மட்டும் இல்ல ...
சம்பளத்த வச்சு தான் டெலிவரையும் பார்க்க முடியும் ... சார் ..
சார் ... என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போதே எதிர்பாராத விதமாக ஸ்பீக்கர் ஆன் ஆக ...
அப்பொழுது ...
சும்மா ... நொய் ... நொய் ... உயிர வாங்காத ... வந்து சேருது பாரு வயித்த தள்ளிட்டு ... இதுங்க எல்லாம் எதுக்கு தான் வருதோ ! .. என்று சொன்னதும் ...
எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ என்று தெரியவில்லை ...
ராவணன் ராட்சசன் ஆக மாறிய அடுத்த நொடி ... வேக எட்டுகளுடன்
அவள் கையில இருந்த போனை எதிர்பாராத விதமாக பற்றி கொண்டவன் ...
அதில் அதிர்ந்து ஒரு நிமிடம் அவனை பார்க்க ... அவள் முகம் பதட்டத்தால் காணப்படுவது உணர்ந்தவன் ..
சிஸ்டர் ஒரு நிமிஷம் .. நீங்க எங்க வேலை பாக்குறீங்க ? ..
R . M . இண்டஸ்ட்ரீஸ்' ... அங்க மார்க்கெட்டிங் இல்ல வேலை பாக்குறேன் ...
என்று சொன்னதும் ... இன்னும் கோபம் தலைக்கேற ...
ஹலோ ! ... ஹலோ ! ... அதையெல்லாம் பொருள் படுத்தாமல் கட் செய்த ராவணனோ .. அடுத்த நொடி யாருக்கோ ஒருவருக்கு அழைக்க ...
ஹலோ ! ....
R . M குரூப்ஸ் - ஓட சேர்மன் ராவணன் பேசுறேன் ...
சார் ஹெச் ஆர் ரமேஷ் ...
தெரியும் ! ரமேஷ் ... அங்க என்ன நடக்குது ? ...
எல்லாமே நல்லா போயிட்டு தானே இருக்கு சார் ... எந்த பிரச்சினையும் இல்லையே ..
ஓ ! ... அப்படியா .. நம்மளுடைய கம்பெனி ஸ்டாப் எல்லாம் யாரு ? ..
முழுக்க முழுக்க லேடிஸ் தான் சார் ...
R . M குரூப்ஸ் ஒரு மரியாதை இருக்கு ... அது மட்டும் இல்ல ... இது முழுக்க முழுக்க பெண்களால உருவாக்கப்பட்டது ... அவங்க இல்லனா நம்ம இல்ல. ... இங்க வேலை செய்ற ஒவ்வொரு பெண்களும் என்னோட குடும்பம் மாதிரி தான் .. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க ? ..
சார் ! ..
ஒரு பெண்ணை எப்படி மதிக்கணும்னு கூட தெரியல ..
என்னோட கம்பெனியிலேயே அதுவும் கர்ப்பிணி பொண்ணா ! .... இது என்னால ஏத்துக்க முடியல .. அதனால அந்த மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற அவன் பெயர் என்ன ? ..
அசோக் சார் ..
அவன வேலையை விட்டு தூக்குங்க ... அது மட்டும் இல்ல ... அந்த பொண்ணுக்கு இப்பவே ஒரு வருஷத்துக்கான சம்பளம் போனஸ் கொடுத்துட்டு ... அந்த பொண்ணுக்கு மெடிக்கல் லீவு அப்ளை பண்ணுங்க .... உடனே இன்னும் பத்து நிமிஷத்துல இது நடக்கும் ... அது மட்டும் இல்ல அவனா வேலையை விட்டு தூக்கின மட்டும் போதாது .... அவனுக்கு எங்கேயும் வேலை கிடைக்காத
மாதிரி இருக்கணும் ... அதே மாதிரி அவனுக்கு வேலை கொடுத்த அவனையும் தூக்குங்க ... என்று சொல்லிவிட்டு வைத்து விட்டு பெண்ணை பார்க்க ...
சார் ! ... ரொம்ப தேங்க்ஸ் ...
என்று கை கூப்பும் போதே ...
அதை தடுத்து ... நாங்க தான் சாரி கேக்கணும் ... நீங்கள் நம் இல்லனா நாங்க இப்படி இருக்க முடியாது ... அது மட்டும் இல்ல இந்த கம்பெனி முழுக்க முழுக்க உங்களால் ஆனது ... உங்களுடைய உழைப்பு இல்லனா நாங்க இல்ல ...
என்று போதே சிறு புன்னகையோடு ... என் கண்ணுக்கு தெய்வம் மாதிரி இருக்கீங்க ? .. நீங்க எந்த பிரச்சனைக்காக வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியல ... ஆனா ! நல்லா இருப்பீங்க சார் ... ரொம்ப நல்லா இருப்பீங்க ... உங்களோட குடும்பத்தோட சந்தோஷமா இருப்பீங்க .. எங்களையும் ஒரு ஆள மதிக்கிற ... உங்க நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது ...
என்ற சொல்லும் போதே ராவணனின் கண்கள் கலங்க ரொம்ப தேங்க்ஸ் ...
சிஸ்டர் ... அதே சமயம் அவளின் வார்த்தைகள் அவனுக்கு பலம் சேர்க்க ...
நான் போயிட்டு வரேன் சார் ...
ம்ம் ! போங்க வீட்டுக்கு பத்திரமா போங்க ... என்று சொல்லிவிட்டு ராவணன் திரும்பும் போது ...
ராவணன் இன்னும் டூ ஹவர்ஸ் இருக்கு ... நம்மளுக்கு டைம் இல்ல ...
என்று வர்ஷா சொல்லும் போதே
ராவணனின் ரத்தக் கரை படிந்த ஆடை அவளின் நிலைமையை எடுத்து சொல்ல. .. அதே சமயம் ஒவ்வொரு நிமிடமும் புழுவாய் துடித்தான் அவள் நிலைமை எண்ணி ... ஒரு கணவனாக ... ஒரு காதலனாக .. இன்னும் சொல்லப்போனால் அவளின் உயிராக அவள் துடிப்பது அவன் துடிப்பது போல இங்கே அவன் துடித்துக் கொண்டிருந்தான் ஒவ்வொரு நிமிடமும் ...
அதேசமயம் அவனின் ஆளுமையும் அவனின் அகங்காரமும் அவளின் காலுக்கு கீழே ... என்பது போல இருக்க .... சிறிது நேரத்துக்கு முன்பு இங்கு நடந்தவை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கோ அவனின் காதலை கண்ட வியப்பாகத்தான் இருக்க ...
இதையெல்லாம் பார்க்கும் போது காதல் எவ்வளவு அழகானது ... அதை உணர்ந்த அந்த நொடி மிகவும் அழகு ... ஆனால் அவள் படும் வேதனைகள் எல்லாம் யார் அறிவார் ? ... அது தெரியும் போது அவன் நிலை என்ன ஆகும் ... ராவணாக இருப்பானா அவள் காவலனாக இருப்பானா பொறுத்திருந்து பார்க்கலாம் ...
இதே போல் மற்றொரு இதயம் அவளுக்காக துடித்துக் கொண்டிருக்க ....
ஆம் ! விஷ்ணு தான் ...
சென்னையின் வான் பரப்பை கடந்த சில நிமிடத்தில் விஷ்ணுவின் ஹெலிகாப்டரின் திறன் உச்சகட்ட வேகத்திற்கு மாற்ற ...
அதேசமயம் ராணுவ பயன்பாட்டின் போது பயன்படுத்தப்பட்டுள்ள அந்த சிறப்பு எஞ்சின் என்று கர்ஜனை செய்து கொண்டு மேகங்களுக்குள் பாய ...
அவன் எதை பற்றியும் பொருள் படுத்தவில்லை தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சுமார் அகமதாபாத் 1400 கிலோ மீட்டர்
கடக்க .. விஷ்ணுவின் கைகளில் இருந்த அந்த ஸ்டேரிங் அவன் இதயத்துடிப்பிற்கு இணையாக சுழல ...
சாதாரண ஹெலிகாப்டரில் சுமார் ஆறு மணி நேரம் வர வேண்டியதை
ஹைபிரிட் Eurocopter X3 ... இது மணிக்கு 400 .. 500 km செல்லும் .. வேகம் திறன் கொள்ள ...
அதே சமயம் அவனின் வேகம் ... இந்திரத்தின் வேகத்தை விட விஷ்ணுவின் வேகம் அதிகமாக இருக்க .. உயரமான பகுதிக்கு செல்லும்போது காற்றின் திசை கேட்ப வேகத்தை அதிகரிக்க ... அதே சமயம் மேகங்களுக்குள் கிழித்துக் கொண்டு புவியீர்ப்பு விசைக்கும் சவாலாக அவன் பறந்து கொண்டிருந்தான் ...
அவனின் வேகம் அவனின் ஆக்ரோஷம் இன்ஜின் ரெட் லைனுக்கு சென்றாலும் ...
வெடிக்கும் நிலை வந்தாலும் பரவாயில்லை என்று Maximum Throttle'-ல் செல்ல ...
ஆம் ! வானம் வழிவிடவில்லை என்றாலும் அது இரண்டாக கிழித்து சொல்லவும் துணிந்து விட்டான்...
நேரம் நெருங்கிக் கொண்டே இருக்க .. வேகமும் அதிகரிக்க ...
அந்த அளவுக்கு பாசக்காரன் ...
தன் தங்கை என்று அறியாமலேயே ! ... அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது அவளுக்காக ...
காத்திருங்கள் அடுத்த பதிவில் ? ..
ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ...
தொடரும் ...
"ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :,
https://pratilipi.app.link/kFReDuCbD2b
#pratilipi stories #love #Audio story #story #💝இதயத்தின் துடிப்பு நீ
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
உங்களுக்கு பிடிச்சிருந்தா . இந்த லிங்க் கொடுத்து இருக்கேன் அதுல போய் படிச்சு கோங்க ... Friends