#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நல வாரியத்தில் பதிவு செய்தால் அரசு சலுகைகள் கிடைக்கும்
ஹச்எம்எஸ் தூத்துக்குடி மாவட்ட உழைப்பாளர் சங்க தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் தகவல்
தூத்துக்குடி ஏப்.27
அமைப்புச்சாரா தொழிலாளர் களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மீது அக்கறை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசால் ஏற்படுத்தப்பட்டது தான் நல வாரியம்.18 வயது முதல் 60 வயது வரை நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.
பெருவாரிய மக்களுக்கு நல வாரியம் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை கொரனா காலத்தில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.2000/- வழங்கியுள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை நலவாரியத்தில் பதிவு செய்து பண பலன்களை பெறலாம். 18 க்கும் மேற்பட்ட நலவாரியங்கள் உள்ளன. நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு கல்வி உதவிதொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதிய திட்டம், கண் கண்ணாடி என பண பலன்கள் மற்றும் நிறைய சலுகைகள் கிடைக்கும்.
நலவாரியத்தில் பதிவு செய்யும் அலுவலக இடம் ராஜாஜி பூங்கா எதிரில் மேல் மாடியில் உள்ளது.காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து உறுப்பினர் ஆகி அரசு திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட உழைப்பாளர் சங்க தலைவர் (ஹச்எம்எஸ்) டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.