தேசபக்தியின் தாரக மந்திரம்: பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவு தினம்!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி கீதமான 'வந்தே மாதரம்' பாடலைத் தந்த மாபெரும் இலக்கியவாதி பங்கிம் சந்திர சட்டர்ஜி மறைந்த தினம் இன்று. 1838-இல் வங்காளத்தில் பிறந்த இவர், இந்தியக் கலாச்சாரம் மற்றும் மொழியின் பெருமையை மக்கள் உணரச் செய்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். 1872-இல் இவர் தொடங்கிய 'வங்க தர்ஷன்' இதழ், எளிய மற்றும் சரளமான நடையில் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டியது. இவருடைய புகழ்பெற்ற 'ஆனந்தமட்' நாவலில் இடம்பெற்ற 'வந்தே மாதரம்' பாடல், பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது. 'வங்காள எழுத்தாளர்களின் குரு' என்று ரவீந்திரநாத் தாகூரால் போற்றப்பட்ட இவர், தனது படைப்புகள் வாயிலாக இந்தியத் தாயின் பெருமையை உலகறியச் செய்தார். பாரத மண்ணின் விடுதலை வேட்கையை ஒரு பாடலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்த இந்தத் தீர்க்கதரிசியின் புகழ் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா