Shihabdeen
684 views
13 hours ago
#🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போது வரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல்லுங்கள். அதுவும் கூட அவனுடைய வலக்கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை. (வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனுடைய மற்றொரு கரத்தில் 'கொடைப் பொழிவு' அல்லது 'கொடைக்குறைவு' உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகிறான்; (சிலரைத்) தாழ்த்துகிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.58 ஸஹீஹ் புகாரி : 7419. அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு