🌹*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
19.04.2026 *(ஞாயிறு)*
*மகிமை நிறை மறையுண்மைகள்.*
*1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
*"நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன்."* என தாவீது அரசர் கூறுகிறார்.
இவ்வுலகில் இறைவன் ஒருவரே நமக்குத் துணை என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*
இன்றைய ஞாயிறுத் திருப்பலி நற்செய்தியில்
*"“எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். "* எனக் கண்டோம்.
இறைவன் நம்மோடு என்றும் தங்கியிருந்து நமது அகக் கண்களைத் திறந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து*
இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,*
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*🙏
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #பிரார்த்தனை #வேளாங்கண்ணி மாதா