jepin
552 views
1 days ago
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-20 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. அடியோர்களுக்காக, உம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறதிலே பிரியப்படுகிற நித்திய குருவே! நன்றியறிந்த மனதுடனே, தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருமறைக் குருக்களுக்கும், துறவியர், முனிவர், தபோதனர்களுக்கும், கன்னியர்களுக்கும் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உமது மாறாத பொறுமையையும், சத்திய வேதபோதகர் அனைவரிலும், அப்போஸ்தலிக்குச் சற்குருக்களிலும் விளங்கிய, உண்மையான பக்தியுள்ள தைரியப் பற்றுதலையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட செபம்: நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால், ஒவ்வொருவரும் திருமுழுக்கு பெறுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்" (திபா 2 : 38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. அதன்படி பரிசுத்த ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில், 1. மூவொரு இறைவனில் உறுதியான விசுவாசம் கொள்வோம். 2. பாவங்களுக்காக மனம் வருந்துவோம். 3. பரிசுத்த ஆவியார் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தங்கியிருந்து நம்மை வழிநடத்த உருக்கமாக மன்றாடுவோம். (இந்த செபத்தை உறுதியான விசுவாசத்துடன் தினந்தோறும் 20 நிமிட நேரம் செபிக்கவும்) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, என் அன்பில் கலந்த கருணாகரனே! நீர் வாக்களித்தபடி, உமது பரிசுத்த ஆவியை என்மீது அனுப்பியருளும். உம் பரிசுத்த ஆவியின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எனக்கு ஏராளமாக வழங்கி என்னை புதுப்பித்தருளும். மூவொரு இறைவா, உமக்கு நன்றி! மூவொரு இறைவா, உமக்குப் புகழ் ! விண்ணுலகத் தந்தாய், உம் பரிசுத்த ஆவியை என் மேல் பொழிந்தருளும். நன்றி, தந்தாய்! நல்ல தந்தையே, என்றும் உமக்கே புகழ். ஆமென். நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !