novels
817 views
19 days ago
கள்வனே! கள்ளும் தேனடா! 4🐝, https://pratilipi.app.link/hh47GR52X3b நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தவளின் கோவைக் கனி உதடு, ஆணவனின் தாடி சூழ்ந்த கன்னத்தில் பதிந்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வரவில்லை. அதற்குள் நெஞ்சி பிளக்கும் மற்றொரு அதிர்ச்சியில் முற்றிலும் உறைந்து போனாள் பாவை. உறக்கத்தில் கூட அலர்டாக இருக்கும் மதன், திடீரென தன் மீது தாங்கிய கனத்தில் பட்டென கண் திறந்தவன், தன் கன்னத்தையும் திருப்பி இருக்க, கன்னியின் கனியான இதழ் சுவை, காளையவன் முரட்டு இதழில் தேனாக ஊரியது. இதுநாள் வரை பெண்ணின் வாசம் எப்படி இருக்கும் என்பதை கூட அறியாத காளையன், திடீரென ஒரு அந்நிய பெண்ணின் இத்தகைய நெருக்கமும், இதழ்கள் தீண்டிக்கொண்டிருக்கும் ஸ்பரிசமும், மதனே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது, ஆணவனின் திகைப்பு நீங்கா விழிகளிலும் பிரதிபலிக்கவே செய்தது. இரண்டு நொடி இதழ் ஒற்றல், மூன்றாம் நொடி உதடு கிழிந்த நிலையில் கண்ணீரோடு தரையில் கிடந்தாள் முத்தப்பெண். #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #status #romance #love