Makkal Mugam
347 views
17 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிவகங்கை, ஏப்.12- சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல்-23 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டும், இளம் வாக்காளர்களை ஊக்குவித்திடும் வகையிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணாக்கர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளான ஆதன் முகமூடி வெளியீடு, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த கலை நிகழ்ச்சிகள், வாக்கு செலுத்துவது குறித்த உரையாடல், மைம், நாடகம், வில்லுப்பாட்டு போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரமிடு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மாதிரி வடிவமைப்பு, குழுபுகைப்படம் போன்ற பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியானது, தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்களாகிய நாம் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்படும் பொருட்டு, இவ்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர்களாகிய நாம் ஒவ்வொரு வரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் சிவகங்கை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்து, தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சத்யா, செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.