Arivalayam அறிவாலயம்
541 views
22 hours ago
பாஜக தனது கொள்கைகளை ஒரு மாநிலத்தினுள் திணித்து அந்த மாநிலத்திற்காக குரல் கொடுக்கும் மாநில கட்சிகளை எப்படியெல்லாம் ஒழித்துக் கட்டுகிறது என்பதை அந்த கட்சி எப்படி பிற மாநிலங்களில் செயல்படுத்தி ஒவ்வொரு மாநிலத்தையும் விழுங்கி கொண்டு இருக்கிறது என்பதை நினைவு கூர்ந்து மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தனித்துவத்தை பேணி காப்பது நம் அனைவரின் கடமை. பாஜக என்றுமே மக்கள் செல்வாக்கை நேர்மையான வழியில் பெற முடியாத கட்சி. குறுக்கு வழிகளிலேயே யுக்திகளை வகுத்து மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் கடைசி நேரத்தில் தேர்தல் ஆதாயத்தை அடைந்து தங்களை நிலைநாட்டிக்கொள்வார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஒரு சிறந்த முன் உதாரணம். அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சியை தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் உடைத்து ஒரு பாதியை கபளீகரம் செய்து அந்த மாநிலத்தையே தற்போது தங்களின் அதிகாரத்திற்கு கொண்டு வந்து விட்டது. இதே போன்று பீகாரில் நிதிஷ் குமாரை தங்கள் வசம் இழுத்து அந்த மாநிலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதை அதிமுக ஆதரவாளர்கள் கூட மறுக்க மாட்டார்கள் — ஏனென்றால் இது வெளிப்படையான வரலாற்று உண்மை. பாஜக ஒரு மாநிலத்தினுள் புகுந்து விட்டால் அந்த மாநிலத்தின் வளர்ச்சி என்பது நிஜமாக இல்லாமல் நிழலாகவே இருக்கும். மத்திய பிரதேசத்தில் 20 வருட பாஜக ஆட்சியிலும் மனித வளர்ச்சி குறியீடு (HDI) தேசிய சராசரியை விட கீழே தான் இருக்கிறது என்பது அரசு புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன. இந்த வரிசையில் எப்படி சிவசேனா மகாராஷ்டிரா மாநில கட்சிக்கு நடந்ததோ அதே போன்று தான் தமிழ்நாட்டையும் தங்கள் வசமாக்கிக்கொள்ள துடிக்கிறார்கள். இதற்கு தான் எடப்பாடி பழனிச்சாமி துணை போகிறார். பழனிச்சாமிக்கு தேவை முதல்வர் பதவி, பாஜகவுக்கு தேவை தமிழ்நாடு. காட்டிக்கொடுக்கும் இடத்தில் இப்போது அதிமுக காத்திருக்கிறது. அதிமுக "குலவிளக்கு" திட்டம் அறிவிக்கிறது, "நலத்திட்டங்கள் தருவோம்" என்கிறது — ஆனால் தாங்கள் ஆண்ட 10 ஆண்டுகளில் ஏன் தரவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இவ்வளவு வரலாறும் தெரிந்தும் கூட துரோகத்தை செய்ய நினைக்கும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் தனித்துவத்தை பேணி காப்பது நமது கடமையல்லவா? 2021ல் அதிமுக ஆட்சியில் பழனிச்சாமியின் நிர்வாகம் என்ன நிலையில் இருந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். கோவிட் காலத்தில் மக்கள் தவித்தனர், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் அதை எல்லாம் சரி செய்து நிலைமையை சமாளித்து வெற்றிகரமாக மாநிலத்தின் வளர்ச்சியை பல துறைகளில் முன்னுக்கு நகர்த்திய முதல்வர் ஸ்டாலின் நிர்வாக திறமைக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தி மீண்டும் திமுக ஆட்சியை தொடர செய்வது நம் கடமை அல்லவா? நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காக மத்திய அரசுடன் தொடர்ந்து போராடியது, மாணவர்களின் கல்வி உரிமையை காத்தது — இவை எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல, வரலாற்று சாட்சியங்கள். முடிவுகள் எடுக்கும் தலைவனாக நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். மத்திய அரசுடன் மோதலிலும் கூட தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார் — நிதி பகிர்வு பிரச்சினையில், மொழி திணிப்பு விவகாரத்தில், கல்வி உரிமையில். இன்று சொல்லுங்கள் — தமிழ்நாட்டுக்காக இங்கேயே கம்பீரமாக ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் தலைவனை தமிழ்நாட்டை ஆள செய்ய விடனுமா, அல்லது டெல்லியின் விருப்பத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றும் கூட்டணியை அனுமதிக்க வேண்டுமா? நெஞ்சில் கைவைத்து மனசாட்சியுடன் சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும். இன்று 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது — இது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவு. மேலும் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவி செல்வங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இவர்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சும் இந்த திட்டத்தை தொடர நாம் வழி விட வேண்டும். இதை நாம் தடுத்தால் நாமே வரலாற்று தவறு செய்தவர்களாக மாறிவிடுவோம். திமுக மகளிர் உரிமை தொகை திட்டம் வெறும் வாக்குறுதியாக அறிவிக்கப்படவில்லை — ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னபடி 1000 ரூபாயில் தொடங்கி இப்போது 1000 கூட்டி 2000 ரூபாயாக உயர்த்தி நடைமுறையில் கொடுக்கப்படுகிறது. இதுவே உண்மையான தலைமை. ஆனால் அதிமுகவோ தேர்தல் நெருங்கும்போது "குலவிளக்கு" என்ற பெயரில் அதே திட்டத்தை நகலெடுத்து அறிவிக்கிறது — தாங்கள் 10 ஆண்டு ஆண்டபோது இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியவர்களை நம்ப வேண்டுமா, இல்லை போலி விளம்பரம் செய்பவர்களை நம்ப வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யட்டும். இன்று 10 லட்சம் லேப்டாப்கள் மாணவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கின்றன. அடுத்து 35 லட்சம் லேப்டாப்கள் கல்லூரி மாணவர்களுக்கு செல்ல இருக்கின்றன. 2021க்கு பிறகு UPSC தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது — இது தற்செயல் அல்ல, கல்வியில் திமுக அரசு செய்த முதலீட்டின் பலன். தமிழ்நாடு இன்று கல்வியின் அடையாளமாக நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது. இது தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சியை தொடர செய்வது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் செய்யும் பெரிய பங்களிப்பு. இதில் தவற விட்டால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நாமே தடைக்கற்களாக மாறிவிடமாட்டோமா? சிந்தித்து பார்த்து மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். 💥💥💥 M. K. Stalin 💪💪💪 @top fans Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK ITWing #VoteForDMK #TNwillFightTNwillWin #TNvsNDA #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும் #SayNoToNDA #உதயசூரியன் #🎙️அரசியல் தர்பார் #🤪தேர்தல் களம் மீம்ஸ்😁 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🤪தேர்தல் அலப்பறைகள்📦 #📰தமிழக அப்டேட்🗞️