மதுரை வழக்கறிஞர் ஆர்.எஸ்.இராஜா மறைவுக்கு இரங்கல்.
மதுரை மாநகரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான கோமதியம்மாள் அவர்களின் புதல்வரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ்.இராஜா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட வழக்கறிஞர் இராஜா, 2000-ஆம் ஆண்டில் தாயார் கோமதி அம்மாள் அவர்களுடன் இணைந்து அனைத்துக் கவுண்டர்கள் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினார். பா.ம.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.
வழக்கறிஞர் ஆர்.எஸ்.இராஜா அவர்களை இழந்து வாடும் கோமதியம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
##PMK2.0