#செய்திகள் #தற்போது செய்தி
✍️🌹 மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு, ஏப்.14-
ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நேற்று முன் தினம் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொல்லம் பாளையம் பகுதி வார்டு 56 - தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவரும் செய்த சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். ஈரோடு மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்து நிறைவேற்றபட்டன. தாங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நேற்று கிறிஸ்தவ நல அமைப்பு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு சந்திப்பில் C.S.I பொதுசெயலாளர் வழக்கறிஞர் (தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம்) பெர்ணான்ட்ஸ் ரத்தின ராஜா மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு மேற்கு சட்டமன்ற வேட்பாளர் சு.முத்துசாமி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், பழனியப்பன், மொடக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் செந்தில்நாதன், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிறப்புறை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.