இன்று காமதா ஏகாதசி
********************************
காமதா ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித் தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கி விடும் என்று கூறுகிறது புராணம்.
இந்த ஏகாதசி திங்கட்கிழமை, மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திரத்தில் வருவது சிறப்பு. மோஹினி ஏகாதசி என்று பெயர். ஸ்ரீராமரே அனுஷ்டானம் செய்த ஏகாதசி.
சீதையை பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம், (சித்திரை அமாவாசைக்கு மறுநாள் சாந்திரமான முறையில் வைகாசி மாதம் துவங்குகிறது) வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்’’ என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ஸ்ரீராமபிரானே, முறையாக, வைகாசி ஏகாதசி விரதம் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு.
செய்த பாவங்களுக்கு வருந்தி இந்த ஏகாதசி விரதம் இருந்தால், பாவம் தீரும் என்பது ஏகாதசியின் தத்துவம். ஏகாதசி அன்று, பூரணமாக விரதமிருந்து, திருமாலை வணங்கி, திருமால் கோயிலுக்குச் சென்று, விளக்கு போட்டு, அர்ச்சனை செய்து, இரவு முழுக்க கண்விழித்து, புராண, இதிகாச, ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடி, மறுநாள் காலையில் துவாதசி பாரணை முடிக்க, ஏகாதசியின் முழுப்பயனும் கிடைக்கும்.
#சர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️ராசிபலன்