Makkal Mugam
574 views
1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்கால கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி, ஏப்.20- ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்கால கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான குலையன்கரிசல், கூட்டாம்புளி,போடம்மாள்புரம், திருமலையாபுரம், புதுக்கோட்டை பஜார், ராமச்சந்திராபுரம், திருவனந்தபுரம், முருகன் நகர், அயனடப்பு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், மேலக்கூட்டுடன் காடு, கீழக்கூட்டுடன் காடு,. தெற்குசிலுக்கன்பட்டி உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் மைக் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர் முன்னதாக குலையன்கரிசல் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில் பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச கல்வி சிறந்த மருத்துவம், வளமான விவசாயம், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் எனவே 23.4.26 அன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மகளிரணியினர் உட்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.