11 வருட மெமரி..
மேஷத்திற்கு செவ்வாய் தரும் ருசக யோகம்..
#adityaguruji
# செவ்வாய்
#TamilArticle
#பலன்கள்
#ஜோதிடம்
#மேஷலக்னம்
#ருசகயோகம்
🍂ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888🍂
உங்கள் ஜாதகம் யோகஜாதகமா? 45
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் பகவான் அளிக்கும் ருசக யோகத்தினைப் பற்றி இப்போது பார்க்கலாம்......
ருசக யோகம்
மேஷம் :
மேஷத்திற்கு செவ்வாய் லக்னத்திற்கும் எட்டாமிட த்திற்கும் உரியவராகி லக்னத்தில் ஆட்சியும் பத்தாமிடமான மகரத்தில் உச்சமும் பெற்று இரு நிலைகளில் ருசக யோகம் தருவார்.
லக்னத்தில் ஆட்சி பெறும் போது நான்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களைத் தன் சிறப்புப் பார்வைகளால் பார்வையிடுவார்.
லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஜாதகர் முன்கோபம் உள்ளவராக இருப்பார். பாபகிரகங்கள் லக்னாதிபதியாக வரும் நிலையில் கண்டிப்பாக நேரிடையாக வலுப்பெறக்கூடாது. சூட்சும வலுதான் பெறவேண்டும். நேரிடையாக வலுப் பெற்றால் ஜாதகர் கொடுமைக்காரராக இருப்பார். சில நிலைகளில் ‘சேடிஸ்ட்’ ஆகவும் இருக்கக் கூடும்.
இங்கிருக்கும் செவ்வாய் சுபக்கிரகங்களின் சம்பந்தம் பெற்றால் நல்லது. நிலைமை மாறும். பாபக்கிரகங்களின் தொடர்போ பார்வையோ ஏற்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை. ஜாதகர் குரூர புத்திக்காரராகவும் கொடுமைக் காரராகவும் இருப்பார்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலே சுபபலன் என்று சொல்லி விடமுடியாது. லக்னாதிபதியாக வருபவரின் குணங்கள் என்ன என்பதைப் பார்த்தே அவர் எப்படிப்பட்டவர், என்ன செய்வார் என்பதைக் கணிக்க வேண்டும்.
இங்கிருக்கும் செவ்வாய் நல்ல ஆரோக்கியம், கட்டான உடல், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம், உடலைப் பேணுதல் ஆகியவற்றை ஜாதகருக்கு தருவார்.
பொதுவாகவே செவ்வாய் லக்னத்தோடு அல்லது லக்னாதிபதியோடு தொடர்பு கொண்டு அவரது தசை நடந்தாலே எல்லோருக்கும் உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும்.
நான்கு மற்றும் ஏழாமிடங்களை அவர் பார்க்கும் நிலையில் என்னதான் அவர் லக்னாதிபதி என்றாலும் அஷ்டமாதிபதியும் அவர்தான் என்பதால் முழுக்க சுபபலன் சொல்வதற்கு இல்லை.
எட்டுக்குடையவன் எட்டாமிடத்தை பார்வையிட்டு தீர்க்காயுள் அமைப்பைத் தரும் அதே நிலையில் சுபத்துவம் பெறாமலிருந்தால் தனது தசையின் ஒரு பகுதியில் விபத்து அசிங்கம் கேவலம் வெட்டுகுத்து கோர்ட்கேஸ் போன்றவற்றையும் தருவார்.
மேஷத்திற்கு இன்னொரு நிலையாக அவர் பத்தாமிடமான மகரத்தில் உச்சம் பெறுவார். ஒரு ஜோதிட விசித்திரமாக சனியின் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறும் நிலையில் செவ்வாயின் வீட்டில் சனி நீசம் பெறுவார்.
லக்ன, அஷ்டமாதிபதியாகி பத்தாமிடத்தில் உச்சமும் திக்பலமுமாக செவ்வாய் இரட்டிப்பு பலம் பெறுவது தசம அங்காரா எனும் நிலையையும் மீறி நிச்சயமாக சரியான நிலையே அல்ல.
பாபக்கிரகங்கள் லக்னாதிபதியே ஆனாலும் மறைவிடங்களில் அல்லாது கேந்திர திரிகோணங்களில் உச்சம் பெற்று வலிமை அடைவது சரியல்ல.
இங்கிருந்து தனது நான்காம் பார்வையால் செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகரிடம் மென்மையான, அதே நேரத்தில் மேன்மையான குணங்களும் இருக்காது. ஜாதகர் கடினமான மனப்போக்கும் பிடிவாதமும் கொண்டவராகவும் முன்கோபக்காரராகவும் இருப்பார்.
லக்னாதிபதி உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பது என்பது இரு கிரகங்களால்தான் முடியும். ஒன்று குருபகவான் மீனத்திற்கு ஐந்தான கடகத்தில் உச்சம் பெற்று மீனலக்னத்தைப் பார்ப்பார். அவர் இயற்கைச் சுபர் என்பதால் அவரது பார்வையால் எல்லா நன்மைகளும் ஜாதகருக்கு உண்டு.
இன்னொருவர் மேஷ செவ்வாய். இவர் இயற்கைப் பாபி என்பதால் லக்ன பார்வைக்கு சில நன்மைகளைத் தவிர்த்து வேறு குண விசேஷம் இருக்காது.
அதே நேரத்தில் இங்கிருந்து நான்காம், ஐந்தாமிடங் களையும் பார்வையிடுவார் என்பதால் ஒருபுறம் லக்னாதிபதியின் பார்வை என்றாலும் அவர் அஷ்டமாதிபதியும் ஆவார் என்பதால் மற்ற சுபக் கிரகங்களின் சம்பந்தமும் பார்வையும் இல்லாவிட்டால் அந்த இடங்களும் நற்பலன் அளிப்பது கடினம்தான்.
பத்தாமிடத்தில் சூட்சும வலுப்பெறாமல் பாபர்களுடன் இணையும் செவ்வாய் அரிவாளைக் காட்டி வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரர்களை உருவாக்குவார். சிறிது சுபத்துவம் பெற்றால் நாகரிகமாக மிரட்டி லஞ்சம் பெறும் துறைகளில் ஜாதகரை இருக்க வைத்தும், கட்டைப் பஞ்சாயத்து செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான வழிகளிலும் பொருள் தேட வைப்பார். ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுதல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் ஜாதகரை பொருள் தேட வைப்பார்.
நாளை ரிஷபத்தை பார்க்கலாம்
🍂அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்..🍂
#🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍