#தேடும் கண்கள்
தேடிப்பார்க்க உன்னை
தொலைக்கவும் இல்லை...
நினைத்துப்பார்க்க உன்னை
மறக்கவும் இல்லை...
முகவரி கேட்டு நலம் விசாரிக்க
காலம் நம்மை
பிரிக்கவும் இல்லை...
நேரம் மாறினாலும்
நினைவுகள் மாறவில்லை,
தூரம் நீண்டாலும்
உணர்வுகள் சுருங்கவில்லை...
உன் நினைவின் நிழலில்
அமைதியாக
நான் இருக்கிறேன்.