முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் பழனி தொகுதி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன உத்தரவை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், நகர செயலாளர் திரு.வேல்மணி, ஒன்றிய செயலாளர்கள் திரு.சௌந்திரபாண்டி, திரு.சாமிநாதன் மற்றும் தனியார் தொழில்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#dmkdindigul