#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்*
ஏப்ரல்-26
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
இயேசுவின் திவ்விய இருதயமே! உமது அன்பின் திருவருட்சாதனமாகிய, ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய், தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, என்னை முழுதும் தேவரீருக்கு வசீகரமாக்கி, இன்று என் சிந்தனை, சொல், செயல்களையும், என் இன்ப துன்பங்களையும் எல்லாம், தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இனி எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை மாத்திரம் நான் சிநேகிக்கவும், இவ்விதமாய் தேவரீருக்கு ஆறுதல் வருவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி. ஆமென்.
பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் புறப்படுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
பிதாவுக்கும், சுதனுக்கும் சரிசமமானவராயிருக்கிற பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
பிதாவின் வாக்குறுதியாக இருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
மோட்ச பிரகாசத்தின் கதிரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
சகல நன்மைகளுக்கும் காரணராயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
பரலோக நீரின் சுனையே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
எரித்துப் பட்சிக்கிற நெருப்பாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
பற்றியெரியும் சிநேகமாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.
நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !