விழிகளின் வீச்சில் விதியினைத் தொலைத்து
வெட்கப் பூக்கள் மெல்ல உதிர...
இதழ்களின் இதத்தில் இதயம் நனைய
இன்பத் தீ இங்கே பற்றிடுமோ!
காற்றின் இடைவெளி கூடக் கசக்க
தோளோடு தோள் உரசி...
வியர்வைத் துளிகள் கவிதை வடிக்க
தேகம் இங்கே தேனாகக் கரையுமோ!
நிச்சலன இரவின் நிசப்தத்தில்
இரு சுவாசங்கள் ஒன்றாகி...
பெயரற்ற ஓர் பரவசத்தில் நம்
உயிர்கள் மெல்ல உருகிப் பிணையுமோ!
#💖நீயே என் சந்தோசம்🥰