Makkal Mugam
536 views
15 hours ago
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பணகுடி குதிரபாஞ்சான் கன்னிமாரா தோப்பு பகுதிகளை சுற்றுலா தளமாக்குவேன் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வாக்குறுதி பணகுடி, ஏப்.20 -- பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் எடப்பாடி யார் ஆட்சி அமைந்ததும் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி வழங்கப்படும். பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் வாக்குறுதி நெல்லை மாவட்டம் ராதாபுரம், சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி.பால கிருஷ்ணன் ராதாபுரம் தொகுதியில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளான சிவகாமிபுரம், அண்ணாநகர், தளவாய்புரம் உட்பட 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.குதிரபாஞ்சான் கன்னிமாரா தோப்பு பகுதிகளை சுற்றுலா தளமாக்குவேன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்கு எடப்பாடி அரசு அமைந்த உடன் அனுமதி பெற்று தருவேன் அனுமன் நிதி கால்வாயை சீரமைத்து விவசாயிகளுக்கு பயன்பட செய்வேன் போன்ற வாக்குறுதிகளை அளித்து பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மாலை சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பாஜக நிர்வாகி பாபு தாஸ் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பால் துரை பணகுடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் வழக்கறிஞர் ராஜா.பணகுடி நகர அ.தி.மு.க பொருளாளர் இசக்கியப்பன்.உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #செய்திகள் #தற்போது செய்தி