Follow
ஜா ஞானசேகர்
@10769021
4,334
Posts
4,209
Followers
ஜா ஞானசேகர்
505 views
1 months ago
மனைவியை கௌரப்படுத்துங்கள்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ மனமகிழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை..ஒரு பெண்ணிற்கு இந்த உலகில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள் கணவனின் அன்பு மட்டுமே..! ஒரு பெண்ணுக்கு மூன்று வேலை உணவும் உடுத்த உடையும் கொடுத்தால் போதும் அவள் வாழ்க்கைக்கு என்று சில கணவன்மார்கள் எண்ணம் இவை அனைத்தையும் இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்துவிடுவாள் ஆனால் கணவனின் அன்பு இல்லாமல் வாழமாட்டாள்.. உங்கள் மனைவியின் ஒரு சில தவறுகளை அடிக்கடி குத்தி காட்டாமல் அவளின் பல நல்ல செயல்களில் ஒன்றையாவது சில முறையாவது சொல்லி காட்டுங்கள்...அப்போது தான் அவள் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்.. தனது அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டு வந்து தன் கணவனையே உலகமாக நினைக்கிறாள்.... நீங்கள் அவளை உலகமாக நினைக்க வேண்டாம். ஒரு உயிராக மதித்தாலே போதும் ஆண்களே...... அவள் உலகமே தன் காலடியில் இருப்பது போல எண்ணிக் கொள்வாள். மனைவியிடம் உன் கவுரவத்தைக் காட்டாதே அவள் உன்னை மட்டுமே நம்பிவந்தவள் உன் உறவுகளை அல்ல ""என் சொத்து., என் சம்பாத்தியம்.,என் இஷ்டம் என்றால் அவள் யார்.? உன்னுடன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன.? அவளுக்கென்று சிறு சிறு ஆசைகள் சந்தோசத்தை உன்னிடம் எதிர் பார்க்கக்கூடாதா.? நான் நீ அல்ல நாம்.. மனைவி என்பவள் நம் வாழ்வின் பொக்கிஷம் இதை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களால் மட்டுமே மனைவியின் மகத்துவத்தை உணர முடியும்.. யாராலும் மறுக்க முடியாத உண்மை கணவன் இல்லை என்றால் மனைவி விதவை தான் ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு அனாதை தான்.. மனைவியை தன் பெற்றோர், உறவுகள் வீடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்து ஒரு அடிமையைப் போல் நடத்துபவர்களே! அவளும் இரத்த பாசம் உள்ள ஒரு உயிர் என்பதை மறக்காதீர்கள்! திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக அவளது உறவுகளை பிரிக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது?. ஒரு பெண் கணவனிடம் எதிர்ப்பார்பது காசு பணம் காரு பங்களா இல்லீங்க...எவ்வளவு சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் வந்தாலும் யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காமல் உனக்காக நான் இருக்கேன் கவலைபடாதே என்று ஆறுதலோடு அரவணைக்கும் கணவன் கிடைத்தாலே போதும் அவள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்வாள்... உங்கள் மனைவியை ஒருபோதும் வெறுத்து விடாதீர்கள்..!! ஏனென்றால் உங்களுடன் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை அதிகமாக நினைத்து கொண்டிருப்பவள் அவள் மட்டும் தான்..!! பிரசவ வலியை விட கொடுமையானது கணவன் தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு மிகவும் வலியை தரும்.. மனைவியை அடிக்கும் கணவன்மார்களே..! உங்கள் உயிரை சுமந்து தன்னுயிரை பணயம் வைத்து அவள் பட்ட பிரசவ வலியை நினைத்துப் பாருங்கள்.. அடிக்கவரும கை அந்த நிமிடமே அணைக்கமட்டுமே துடிக்கும்.. பெண்களின்...!! அன்பை போலவே அவளின் வெறுப்பும் மிக ஆழமானது.. அன்பு காட்டியவர்கள் அவளை எட்டி உதைத்தாலும் ஏற்று கொள்வாள்.. ஆனால்.. அவள் வெறுத்தவிட்டவர்கள் கோடி கொட்டி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.. மனமகிழ்ழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை... அழகான பதிவு.. #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
ஜா ஞானசேகர்
956 views
1 months ago
செத்து விட முடியாத ஒரு இருத்தல் விட்டுவிட முடியாத ஒரு உறவு பிடித்துவைக்க முடியாத நேசம் பிடித்திடாத வாழ்தல் அத்தனையும் சேர்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும் அவள் அவளுக்குப்பிடித்த வாழ்தல் என்று ஏதுமில்லை சபிக்கப்பட ஒரு வாழ்தலோடு ஒன்றிப்போனவள் விடியலைப்பற்றி அறியாத ஒரு கும்மிருட்டில் வாழப்பழகியவளுக்கு சூரிய ஒளியின் கதகதப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் அவளுக்கு எந்த தேடலும் இல்லை இருக்கும் இடத்தை ஒளிமயமாய் வைத்திருப்பதாய் நம்பி வாழ்கிறாள் சிறகுடைந்த பறவைக்கு கால்கல் இருப்பது போதும் என நம்புகிறாள் அவள் சிறகுகளின் காயங்கள் ஆறி பலகாலமானது புரியாமலே இன்னமும் முடங்கிக்கிடக்கிறாள்… பறப்பது சிரமம் இல்லை ஆனால் எங்கு பறப்பது என்பது தான் அவளின் பெருங் கேள்வி வானம் விரிந்துகிடந்து என்ன பயன் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களைத்தாண்டி உலகில் அவள் எங்கு போவாள் ? கூண்டுப்றவை அல்ல அவள் தானே அடைபட்டுக்கொண்டவள் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள் அவள் கையாலாகதவள் என்று எந்தப்பெயராவது இருந்துவிட்டுப்போகட்டுமே விதைக்கப்பட்ட விதை விருட்ஷம் ஆகும் எனும் பெருங்கனவு பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களாய் இருக்கும்போது அவள் அப்படித்தானே வாழவேண்டி இருக்கிறது அவள் வெளிச்சமெல்லாம் அந்த பெருவிருட்ஷக்கனவு என்பதால் இருள் அவளை ஏதுமே செய்யவில்லலை... #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖
ஜா ஞானசேகர்
498 views
2 months ago
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறை சூசை மாமுனியே துதி வளர் உமது நற்பதம் வந்தோம் துணைசெய் தெம்மையாளும் தாதையரே #தொழிலாளர்களின்_பாதுகாவலரான_புனித_சூசையப்பரே... #எங்கள்_குடும்பத்தையும்_தொழிலையும்__ஆசீர்வதியும். பிதா சுதன் பரிசுத்த ஆவியாரின் திருப்பெயராலே ‌‌...ஆமென். #புனித_சூசையே... எங்கள் குடும்பத்தின் பாதுகாவலரே... இன்று எங்கள் குடும்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். உம் திருமகன் இயேசுவுக்கு நாங்கள்... சாட்சியாக வாழ வரம் தாரும். #தூய_வளனாரே... எங்கள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கொடையென பெற்றுத் தாரும். நோய் நெடி பேராபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்தருளும். நலிவுற்றுள்ள எங்கள் தொழில்கள் செழிக்க எங்களுக்காக இயேசுவை மன்றாடும். #திருக்குடும்ப_காவலரே... படிக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ...ஞாபக சக்தியை தாரும். எங்கள் சிறு பிள்ளைகள் கடவுளுங்கு அஞ்சி நடக்கவும்... ஒழுக்கத்தில் சிறந்து வளர ஆசீர்வதியும். திருமணதிற்காக காத்திருப்போருக்கு நல்ல மண வாழ்க்கையையும்... அவர்கள் சந்ததி கடற்கரை மணலைப் போல் பழுகி பெருகச் செய்யும்‌ #புனித_சூசையே... எங்கள் வாழ்வின் எல்லா இன்ப துன்ப நேரத்தில் துணையாக இருக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். #ஆமென்_1பர_1அருள்... #✝️இயேசுவே ஜீவன்
See other profiles for amazing content