You Turn on Instagram: "தஞ்சை பெரிய கோயில் அகழியை சுத்தம் செய்யும் பணி தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் தொடங்கப்பட்டதா? தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை என்பதை கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மே 16 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2026 மே 10 அன்று தான் தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். Proof: https://www.etvbharat.com/ta/!state/officials-explains-thanjai-periya-kovil-trench-repair-work-why-not-processed-yet-tamil-nadu-news-tns25060902030 https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2026/May/22/cleaning-work-completed-along-one-kilometer-of-thanjavur-big-temple-moat-district-collector-reports https://x.com/TnjCollector/status/2058218054765662394 https://www.tbsnews.net/world/south-asia/tvk-forms-tamil-nadu-government-vijay-sworn-cm-9-ministers-1434781"
38 likes, 0 comments - youturn.media on May 30, 2026: "தஞ்சை பெரிய கோயில் அகழியை சுத்தம் செய்யும் பணி தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் தொடங்கப்பட்டதா?
தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை