கடலுக்கு அடியில 250 மீட்டர் ஆழத்துல ரவுண்டானா இருக்கும்னு சொன்னா நம்புவீங்களா?
நார்வேல அதை நிஜமாவே சாதிச்சிட்டாங்க.
நார்வேயோட கனவு திட்டமான Rogfast சுரங்கப்பாதையில தான் இந்த அதிசயம் நடந்திருக்கு. இது தான் உலகத்துலேயே மிக நீளமான, மிக ஆழமான கடலுக்கடியிலான சாலை சுரங்கம். மொத்த நீளம் 27 கிலோமீட்டர் (16.6 மைல்). ஆழம் கிட்டத்தட்ட 392 மீட்டர்.
இதுல தான் வரலாற்றுல முதல் முறையா கடலுக்கு அடியில ரெண்டு ரவுண்டானாக்களை வெட்டி முடிச்சிருக்காங்க. கடல் மட்டத்துல இருந்து சரியா 820 அடி ஆழத்துல.
நம்ம ஊர்ல மாதிரி கான்கிரீட் பெட்டியை கடல்ல இறக்கி கட்டல. பாறையையே வெடிவச்சி குடைஞ்சி உருவாக்கியிருக்காங்க. Boknafjord கடல் பகுதிக்கு கீழ இருக்கிற Kvitsøy-னு சொல்ற ஒரு சின்ன தீவுக்காக இந்த இரண்டு அடுக்கு ரவுண்டானா. அந்த தீவுல மொத்தமே 576 பேர் தான் இருக்காங்க. அவங்களுக்காக 2.2 மைல் நீளத்துக்கு தனியா ஒரு கிளை சுரங்கமும் கட்டியிருக்காங்க.
நார்வே அரசின் சாலைத்துறை Statens vegvesen கடந்த பிப்ரவரி 2026-ல் இந்த சந்திப்பு முழுசா தோண்டி முடிக்கப்பட்டதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்கு.
2033-ல் இந்த சுரங்கம் திறக்கப்படும் போது, மணிக்கணக்கா படகுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம, வருஷம் முழுக்க கார்லேயே பயணம் செய்யலாம். பொறியியல் உலகத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுது.
Source: Statens vegvesen, MIT Technology Review
#தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩