#srirangam permal Vaduvur Nrushimha Swamy.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
நம்மாழ்வார்
அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
பேய் முலை உண்டானே! சப்பாணி.
பெரியாழ்வார்