ஃபாலோவ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
16,457
போஸ்ட்
55,956
பின்தொடர்பவர்கள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
680 காட்சிகள்
உத்திரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணுக்கும், சகாரன்பூரைச் சேர்ந்த பீரு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாக்பத் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் (21) என்ற இளைஞருடன் ஃபேஸ்புக் மூலம் சோனிக்குத் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். தனது காதலுக்காகத் தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் துறந்து, ஏற்கனவே மூன்று முறை காதலன் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார் சோனி. ஒவ்வொரு முறையும் குடும்பத்தினர் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தனது காதலன் ஹரீஷ் வீட்டிற்குச் சென்ற சோனி, "இனி உன்னை விட்டுப் போகமாட்டேன்" என அடம்பிடித்துள்ளார். இதையறிந்த சோனியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், சோனி தனது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த கணவர் பீரு, "சரி… இனி அவனுடனேயே நீ இரு" எனக் கூறிவிட்டுத் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து வெளியேறினார். கணவர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, ஹரீஷின் குடும்பத்தினர் காவல் நிலையத்திலேயே ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் இருவரும் சுயநினைவுடனும், விருப்பத்துடனும் இணைந்து வாழ்வதாகக் காவல் துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து, அன்று மாலை அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஹரீஷ் - சோனி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஃபேஸ்புக் காதல் விவகாரத்தில் கணவரே மனைவியைக் காதலனுடன் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேச்சாக உள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
See other profiles for amazing content