ஃபாலோவ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
13,198
போஸ்ட்
50,751
பின்தொடர்பவர்கள்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
477 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எவிக்ஷ்ட் ஆன நிலையில் இந்த வாரம் கெமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் போட்டியாளர் பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போட்டியாளர்களை சரியாக நடத்துகிறாரா விஜய் சேதுபதி ? கமலைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக பிக் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனின் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் இந்த முறை போட்டியாளர்களிடம் அவர் கடுமையாக இருந்தும் அவ்வப்போது நகைச்சுவாகவும் டீல் செய்து வருகிறார். ஆனால் போட்டியாளர்களை அவர் நடத்தும் விதமும் பயன்படுத்தும் சில வார்த்தைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகின. 'இதை செய்ய வக்கு இல்ல' என அவர் அடிக்கடி போட்டியாளர்களிடம் பேசி வருகிறார். அதே போல் தான் பேசும் போது போட்டியாளர்களை எழுந்து நிற்க சொல்வது பள்ளி குழந்தைகளை நடத்துவது போல் இருப்பதாக சிலர் விமர்சனம் தெரிவித்தனர். பிரஜின் விஜய் சேதுபதி வாக்குவாதம் பிக் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்கள் பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா. பிக் கொடுக்கும் டாஸ்க்கில் பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து விளையாடுவதாக விக்கல்ஸ் விக்ரம் குற்றம்சாட்டினார். அதற்கு பிரஜின் 'வேண்டுமானால் நீங்களும் உங்கள் மனைவியை கூட்டி வந்து விளையாடுங்கள்.பிக் கதவை நான் திறந்துவிடச் சொல்கிறேன்' என்று சொன்னார். இந்த வார எபிசோடில் பிரஜின் பேசியதை விதத்தை கண்டித்தார். ஆனால் பிரஜின் 'என்னை சண்டை போடலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால் தப்பும் சொல்கிறீர்கள்' என பேசினார் . தொடர்ந்து தான் ' கேள்வியை நான் சத்தமாக கேட்டால் என்னை தப்பு சொல்கிறீர்கள் ' பதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி பிரஜின் தனது வாதங்களை முன்வைக்க அவரை மடக்க சரியான பாயிண்ட்ஸ் இல்லாமல் விஜய் சேதுபதி திணறினார். தனது கோபத்தை மறைக்க கோட்டை கழற்றுவது , நாற்காலியை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்தார். பின் பிரஜினை பேச விடாமல் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியை விட்டு எஸ்கேப் ஆனார். இதுவரை பிக் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொல்வது தான் சட்டம் என்றிருந்த நிலை மாறி அவரையே எதிர்த்து துணிச்சலாக பேசியுள்ளார் பிரஜின் #👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 #prajin sandra #👁️BB9: கலகலப்பான பிக்பாஸ் வீடு😍
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
493 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (23-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'எஸ்.ஐ.ஆரை கொண்டு வரும் மம்தா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருக்கிறது?. பூத் லெவல் ஆபிசரை போட்டது யார்?. திமுக தானே?' என்று ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், எஸ்.ஐ.ஆரை தேர்தல் ஆணையம் தானே நடத்துகிறது? என்று கேள்வி எழுப்பினார். உடனே ஆவேசப்பட்டு எழுந்து நின்ற சீமான், 'உனக்கு என்ன தம்பி பிரச்சனை? டேய், அரசு தேர்தல் ஆணையத்தை கேட்கிறதா? தேர்தல் ஆணையத்தை, அரசு கேட்கிறதா? முதலில் உனக்கு என்ன பிரச்சனை? இங்கே தள்ளி வா... காமெடி பன்னிட்டு அலையாதீங்க...' என்று கோபமாகப் பேசினார். அப்போது, நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டிருக்கிறதே? என அந்த செய்தியாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான், 'நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம் என்று வழக்கு போட்டார்களா?' என்று கூறி அந்த செய்தியாளரை நோக்கி, 'உன்னை இன்னைக்கு இல்ல, ரொம்ப நாளா பார்க்கிறேன். உனக்கு எதாவது பைத்தியம் ஆகிடுச்சா? கேள்வி கேள்வியா கேளு' என்று கோபப்பட்டு பேசினார். அதற்கு அந்த செய்தியாளர், 'மரியாதையா பேசுங்க..' என்று கூற உடனே சீமான், 'டேய் நீ முதல்ல, மரியாதையா கேள்வி கேளுடா.. கேள்வி கேட்க வேணாம் நீ முதல்ல போடா. ஒரு மைக்கை தூக்கிட்டு கேமரா எடுத்துட்டு வந்தா பெரிய வெங்காயமாடா?. போடா...' என்று ஒருமையில் அநாகரிகமாகப் பேசினார். #📺 நவம்பர் 24 முக்கிய தகவல்கள் #🔴இன்றைய முக்கிய செய்திகள்
See other profiles for amazing content