Follow
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
17,089
Posts
60,246
Followers
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
321 views
2 hours ago
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட செளமியா மற்றும் மோதி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வீடியோவில் இரண்டு நாடுகளிலும் வசித்த தங்கள் அனுபவங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதாவது, "நாங்கள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வாழ்ந்தோம். ஒரு நாள், திடீரென்று எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு மலேசியாவிற்குச் செல்ல முடிவு செய்தோம்," என்று மோதி கூறினார். 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில், சிங்கப்பூரில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க தங்களுக்கு சுமார் 4,000 சிங்கப்பூர் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் ஆனது என்று தெரிவித்தனர். ஆனால், கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தற்போது பாங்சார் (Bangsar) எனும் முக்கியப் பகுதியில் சுமார் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால், இதற்காக அவர்கள் செலுத்தும் வாடகை சிங்கப்பூரை விட மிகவும் குறைவு. ஒப்பிட்டுப் பார்த்தால், பாதி செலவிலேயே அதிக இடவசதி கொண்ட, பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகள் மலேசியாவில் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில், ஒரு வாரத்திற்கான மளிகைப் பொருட்கள் வாங்க அவர்களுக்குச் சுமார் 250 முதல் 300 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகியுள்ளது. ஆனால், தற்போது கோலாலம்பூரில் அதைவிட அதிகப்படியான பொருட்களை வாங்க வெறும் 400 முதல் 500 மலேசிய ரிங்கிட் மட்டுமே செலவாகுகிறதாம். மலேசியாவிலேயே விளைவிக்கப்படும் உள்ளூர் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதால், மளிகைப் பொருட்கள் மிகவும் பிரஸ்ஸாகவும், விலை குறைவாகவும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்புடன் எதையும் ஒப்பிட முடியாது என்றும், கார் இல்லாமலே எங்கும் செல்லும் அளவுக்கு அங்கு திறமையான பொது போக்குவரத்து இருப்பதாக அந்த தம்பதி தெரிவித்தனர். ஆனால், கோலாலம்பூரில் வசதிக்காக ஒரு கார் வைத்திருப்பது கிட்டத்தட்ட அவசியமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறினர். சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது மலேசியாவில் இணைய வேகம் குறைவாக இருப்பதாகவும், அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். சிங்கப்பூரில் குழாய் நீரை தாராளமாகக் குடிக்கலாம் என்றும் மலேசியாவில், குடிநீரைச் சுத்திகரிக்க ஒவ்வொரு மாதமும் வாட்டர் பியூரிஃபையருக்காக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் செளமியா கூறினார். #🗞️ ஏப்ரல் 10 ட்ரெண்டிங் நியூஸ் 📱 #வாழ்வின் சுவாரசியம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
376 views
2 hours ago
பயணம் போகும் நாள் இரவு கொஞ்சமும் தூங்க விடாமல் "அப்போ இனிமே அடுத்த லீவு எப்ப தருவான்"… என்று நூறாவது முறையாக ஒரே கேள்வியை … "இன்னும் ஒரு வருஷம் கழிஞ்சா லீவு கேட்டா கிடைக்குமா" … என்று மாற்றி மாற்றி கேட்கும் அந்த சிறுபிள்ளைதனமான கெஞ்சல் … வெளிநாட்டுகாரன் மனைவி. ♥"இந்த சட்டை உங்களுக்கு பெரிசா இருக்கு இது இங்கே கிடக்கட்டும்" என்று ஒரு உடை வியர்வையோடு உள்ள அன்று போட்டிருந்த சட்டை நமது ஞாபமாக தன்னோடு வைத்துகொள்ளும் வெளிநாட்டுகாரன் மனைவி. ♥"இந்த சேலை கலர் பாருங்க இதே மாதிரிதான் எனக்கு வேணும்" என்று அறையின் கதவில் நின்று ஒரு முறை அழைக்கும் அந்த பயண நேரத்தில் அது சேலையின் கலர் காட்ட அல்ல …இன்னும் ஒரு முறை முத்தம் கொடுக்க அழைக்கும் அந்த வெளிநாட்டுகாரன் மனைவி… அவளுக்கு மட்டுமே வந்த கலை. ♥காரில் ஏறி போகும், போது அவள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவது.. அது யாரும் பார்க்கும் முன்பு சேலை தலைப்பில் நெற்றி வேர்வையோடு துடைப்பதும்… வெளிநாட்டுகாரன் மனைவி. ♥கார் வீட்டின் வளைவில் திரும்பும் போது கார் கண்ணாடியில் அவள் தலை தெரிவது …எல்லோரும் போனபின்பும் அவள் மட்டும் நின்று வெறித்துப் பார்ப்பது … வெளிநாட்டுகாரன் மனைவி . ♥இன்று அவர் போன் கால் வரும் என.. துணி துவைக்கும்போதும் ஜன்னல் ஓரத்தில் போன்… அம்மி அரைக்கும்போதும் ஆட்டுகல் மீது போன்… அடுக்களையில் திட்டின் மீது போன்.. அது எந்த நிமிஷமும் வரலாம் … வராமலும் போகலாம் … வெளிநாட்டுகாரன் மனைவி . ♥இன்னைக்கு போன் வந்தால் 'உனக்கு என்னவேணும் கேள் என்று அவர் கேட்டால்… ஒரே பதில் கேட்டால் சம்மதிக்கணும் முடியும்னா கேட்கிறேன்னு சொல்லணும்' .. அப்படி அவர் சம்மத்தித்தால்… அப்போ கேட்கிற ஒரே கேள்வி ♥"இனிமே நீங்க வெளிநாட்டுக்கு போகம என்னோடயே இருப்பீங்களான்னு" … அது…அது … வெளிநாட்டுகாரன் மனைவி. #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #🤗ஆண் பெண் நட்பு😎 #👪 அன்பான குடும்பம் #கணவன் மனைவி பாசம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
348 views
2 hours ago
வழக்கமாக அரசியல் கூட்டங்கள் என்றாலே லாரிகளில் ஆட்களை ஏற்றி வருவது, பணப்பட்டுவாடா, மதுபானம் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் என ஒரு கணக்கு இருக்கும். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் காரைக்குடி வருகையின் போது இவை எதுவுமே இல்லாமல், மக்கள் தாமாகவே முன்வந்து அலைகடலென திரண்டது திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய அரசியல் வியூகங்களை நிலைகுலைய செய்துள்ளது. எவ்விதத் தூண்டுதலும் இன்றி, ஒரு தலைவனை பார்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக தார்ச்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் காத்திருந்தது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு அதிசயம். இந்த கட்டுக்கடங்காத மக்கள் எழுச்சியை கண்டு பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல் கும்பல்கள் பெரும் அச்சமடைந்துள்ளன. தங்களது அதிகார பலம் மற்றும் பண பலத்தை கொண்டு கூட்டத்தை கூட்டும் இவர்களுக்கு, ஒரு பைசா செலவில்லாமல் திரண்ட இந்த தலைகளின் கடல் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியுள்ளது. “காசு இல்லை, கறிச்சோறு இல்லை, ஆனாலும் இவ்வளவு கூட்டம் எப்படி?” என்ற கேள்வியே இப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் ரகசிய விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் ஆனது அல்ல, அது திராவிட அரசியலின் மீதான மக்களின் ஆழ்ந்த அதிருப்தியின் வெளிப்பாடு என்பதை இந்த பிரம்மாண்டம் உறுதிப்படுத்துகிறது. விஜய்யின் வருகையை தங்களது கேமராக்களில் பதிவு செய்ய காத்திருந்த தேசிய ஊடகங்களுக்கு, காரைக்குடி பொதுமக்கள் வலிய வந்து பேட்டி கொடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்திய விதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம், விஜய்யிடம் ஒரு நேர்மையைக் காண்கிறோம்” என பொதுமக்கள் வெளிப்படையாக பேசுவது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே பழகிப்போன வட இந்திய ஊடகங்கள், இப்போது விஜய்யின் மக்கள் செல்வாக்கை ஒரு “மக்கள் புரட்சி” என வர்ணிக்க தொடங்கியுள்ளன. காரைக்குடியில் தொடங்கிய இந்த எழுச்சித் தீ, வரும் 2026 தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சூழ்ந்து கொள்ளப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி திரண்ட இந்த “உண்மையான” மக்கள் கூட்டம், பணநாயகத்தை விட மக்கள் நாயகமே வலிமையானது என்பதை நிரூபித்துள்ளது #வருங்காலம் அரசியல் மாற்றம் #தமிழக வெற்றி கழகம் (TVK) #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #📦மறக்காம ஓட்டுபோடுங்க மக்களே👆 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
465 views
2 hours ago
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல்முறை களம் காணும் தேர்தலிலேயே மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் என்பதையே இந்த ஆய்வுத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் 18 முதல் 24 வயது வரையிலான இளம் தலைமுறை வாக்காளர்களில் சுமார் 63 சதவீதத்தினர் தங்களது முதல் தேர்வாக விஜய்யையே தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே 33 சதவீத ஆதரவு விஜய்க்கு இருப்பதாக இந்த சர்வே தெரிவிக்கிறது. இது இளைஞர்கள் மத்தியில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான தாகம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. பெண் வாக்காளர்களை பொறுத்தவரை, 35 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளில் 45 சதவீதத்தினர் விஜய்யின் கொள்கை மற்றும் நேர்மையான அணுகுமுறையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய தலைமை உருவாக வேண்டும் என்பதில் பெண்கள் உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது. சிறுபான்மையினர் வாக்குகளில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே சாதகமாக இருக்கும் நிலை மாறி, தற்போது 30 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் தவெக பக்கம் திரும்பியுள்ளன. இது விஜய்யின் மதச்சார்பற்ற மற்றும் சமத்துவ அரசியலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய ஆட்சிக்கு எதிராக இருக்கும் 25 சதவீத எதிர்ப்பு வாக்குகளும், எந்த கட்சியையும் சாராத 40 சதவீத நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் விஜய்க்கே கிடைப்பதாக இந்த லேட்டஸ்ட் சர்வே தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கணிப்புகள் அப்படியே வாக்குச்சாவடிகளில் எதிரொலிக்கும் பட்சத்தில், தமிழக வெற்றி கழகம் தனி பெரும்பான்மையுடன் 180 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிப்பது உறுதி என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இதுவரை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் கோட்டைகள் தகர்க்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் சகாப்தம் பிறப்பதற்கான அறிகுறியாகவே இந்த தரவுகள் பார்க்கப்படுகின்றன. எவ்விதக் கூட்டணி பலமும் இன்றி, மக்களின் நேரடி ஆதரவை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ள விஜய்க்கு, இந்த சர்வே முடிவுகள் ஒரு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. தமிழகத்தில் ஒரு அமைதியான ஆனால் வலிமையான அரசியல் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், 2026-ல் கோட்டை விஜய்யின் வசமாகும் என்பதையும் இந்த ‘மெகா சர்வே’ முடிவுகள் உரக்க சொல்லி வருகின்றன. திராவிட கட்சிகளின் பல ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, ஒரு புதிய விடியலை நோக்கி தமிழகம் நகர போவதை இந்த தரவுகள் உறுதி செய்கின்றன. #அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் #தமிழக வெற்றி கழகம் (TVK) #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #📦மறக்காம ஓட்டுபோடுங்க மக்களே👆 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
368 views
2 hours ago
தமிழக அரசியல் இன்று விஜயைச் சுற்றியே சுழல்கிறதோ என்ற சந்தேகம் இப்போது மெல்ல மெல்ல உண்மையாகி வருகிறது. அதுகுறித்து ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் நிலவி வருகிறது. ஒருபுறம் பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த கட்சிகள் கூட்டணி கணக்குகளுக்காகத் தவம் கிடக்க, மறுபுறம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாட்டுக்குத் தன் அரசியலைச் செய்து வருகிறார் விஜய். விஜயின் இந்த அரசியல் நகர்வு மிகவும் நுணுக்கமானது. குறிப்பாக, தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகும் "முதல் தலைமுறை வாக்காளர்களை" அவர் குறிவைப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் அதைவிட முக்கியமாக, தமிழகத்தின் சிறுபான்மையினர் வாக்குகளை விஜய் கணிசமாகப் பிரிப்பார் என்று வரும் கருத்துக்கணிப்புகள் ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் தலைவலியைத் தந்துள்ளன. மற்ற கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்க, விஜய் எவ்வித சலனமும் இன்றித் தன் பாதையில் பயணிப்பது தான் இங்குள்ள மிகப்பெரிய 'அரசியல் முரண்'. விஜய் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்தாலும், காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற தேசிய இயக்கங்கள் அவரை மையப்படுத்தியே தங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வது 'விஜய் ஃபீவர்' எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் பேரியக்கம் ஒருபுறம் திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும், அக்கட்சியின் அடிமட்டத்தில் ஒரு 'விஜய் பாசம்' ஓடிக்கொண்டே இருக்கிறது. செங்கோட்டையன், எடப்பாடி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விஜயுடன் கைகோர்க்க விரும்பியதும், அதற்காகவே திமுக உடனான பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டதும் இப்போது ரகசியமல்ல. "உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் தான் இருக்கிறது" என்று விஜய் வீசிய ஒற்றை வசனம், காங்கிரஸ் மேலிடத்தை அதிரவைத்துள்ளது. அதேபோல், அதிமுகவில் இருந்து விலகி விஜயுடன் இணைந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அதிமுகவின் அடித்தளத்தையே ஆட்டியுள்ளது. எடப்பாடி விஜயுடன் கூட்டணி வைக்கத் துடித்தார் என்ற செய்தி வெளியானதும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. பழைய அரசியல் வியூகம் இவை அனைத்திற்கும் மேலாக, விஜய் எனும் பிம்பம் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. தனித்து நின்று அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அவரது துணிச்சல், இதுவரை திராவிடக் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட தேர்தல் ஃபார்முலாக்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. பழைய அரசியல் வியூகங்கள் எடுபடாத சூழலில், விஜய்க்கு எதிராக எத்தகைய ஆயுதத்தை எடுப்பது எனத் தெரியாமல் திணறும் எதிர்த்தரப்பினர், இப்போதே மே 4-ஆம் தேதியின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். ஆனால், மக்கள் மனநிலை யாருக்கு மகுடம் சூட்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நீடிக்கிறது. மே 4ம் தேதி வெளிவரப்போகும் தீர்ப்பு, இந்தத் தனிப் பாதையின் வெற்றியைச் சொல்லப்போகிறது..!! #📦மறக்காம ஓட்டுபோடுங்க மக்களே👆 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #வருங்காலம் அரசியல் மாற்றம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
9 hours ago
காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல, அது ஒரு நோயின் அறிகுறி (Symptom) மட்டுமே. அதாவது நம் உடலுக்குள் ஏதேனும் நோய்த்தொற்று (Infection) ஏற்பட்டிருந்தால், அதன் வெளிப்பாடாகவே காய்ச்சல் வரும். காய்ச்சலுக்கான காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் என அதற்கு வைரஸ் தொற்று (Viral Infection) தான் முக்கியமான காரணமாக இருக்கும். சில நேரங்களில் பாக்டீரியா தொற்றுகளாலும் காய்ச்சல் வரலாம். உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் ஏற்படும் புண்கள், பற்களில் ஏற்படும் தொற்று, கணைய அழற்சி, பித்தப்பைக் கற்களால் ஏற்படும் சீழ்த்தொற்று என வேறு காரணங்களாலும் காய்ச்சல் வரலாம். வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, பூஞ்சைத் தொற்று என தொற்றுகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் பாக்டீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவைதான் ஆன்டிபயாடிக் மருந்துகள். எனவே, வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதால் எந்தப் பயனும் இருக்காது. பெரும்பாலான நேரங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், சளிக்கு வைரஸ் தொற்றுதான் காரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில், தேவையற்ற ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தவிர, நம் உடலுக்கு நன்மை செய்யும் சில கிருமிகளையும் இந்த மருந்துகள் அழித்துவிடும். காய்ச்சல் 100 டிகிரி முதல் 101 டிகிரி வரை இருந்தாலோ, மாலை நேரத்தில் லேசான குளிர் இருந்தாலோ, உடல் சோர்வு அதிகமாக இல்லையென்றால் காய்ச்சலைக் குறைக்க பாரசிட்டமால் (Paracetamol) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். 'கம்யூனிட்டி இண்டியூஸ்டு ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்' (Community-induced antibiotic resistance ) என்று சொல்லக்கூடிய நிலை உருவாகும். அதாவது தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்துகளின் விளைவால், அந்தக் கிருமிகள் அந்த மருந்துக்கு எதிராகத் தங்களை மாற்றிக்கொண்டு 'ஸ்மார்ட்' ஆகிவிடும். இதனால் பிற்காலத்தில் கடுமையான தொற்று ஏற்படும்போது, எந்த மருந்தும் வேலை செய்யாத நிலை உருவாகலாம். காய்ச்சல் 100 டிகிரி முதல் 101 டிகிரி வரை இருந்தாலோ, மாலை நேரத்தில் லேசான குளிர் இருந்தாலோ, உடல் சோர்வு அதிகமாக இல்லையென்றாலலோ காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் (Paracetamol) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு, நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றித் தானாகவே வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். #ஆரோகிய குறிப்புகள்🚹 #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🤒சளி இருமலுக்கு தீர்வு #💪Mini Workout Challenge #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
615 views
9 hours ago
கான்பூர் பகுதி சேர்ந்தவர் மது குடிக்க பணம் இல்லாதால் வீட்டு சிலிண்டரை அடமானம் வைத்துள்ளார்.... அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இந்தச் செயலைச் செய்துள்ளார். மனைவி ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் சிலிண்டர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் மதுவிற்காகச் சிலிண்டரை அடகு வைத்ததை ஒப்புக்கொண்டார். இதனால் கணவன் – மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக உணவின்றி குழந்தைகள் பசியால் தவித்துள்ளனர். வேறு வழியின்றி அந்தப் பெண் தனது குழந்தைகளுடன் அவுரல் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மக்கன்பூர் புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். தனது கணவர் ஏற்கனவே இரண்டு முறை சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்று மது குடித்திருப்பதாகவும், இப்போது சிலிண்டர் இல்லாததால் இரண்டு நாட்களாகத் தனது பிள்ளைகள் உணவின்றிப் பட்டினியாக இருப்பதாகவும் கூறி அவர் கண்ணீர் வடித்தார். அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு அங்கிருந்த காவல்துறையினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். இதையடுத்து, மக்கன்பூர் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் விஷால் சர்மா, மனிதாபிமான அடிப்படையில் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து அடகு வைக்கப்பட்ட சிலிண்டரை மீட்டு, அதில் கேஸ் நிரப்பி அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தார். காவல்துறையினரின் இந்த எதிர்பாராத உதவியைக் கண்டு அந்தப் பெண் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார். “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமல்ல, மக்களின் துயரத்தைத் துடைப்பதும் காவல்துறையின் கடமை” என நிரூபித்த அதிகாரியின் இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது..... #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🗞️ ஏப்ரல் 10 ட்ரெண்டிங் நியூஸ் 📱
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
523 views
9 hours ago
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, காசநோய் (TB) கண்டறிவதில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் குறித்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு... இதுவரை காசநோயைக் கண்டறிய நோயாளி தனது நுரையீரலிலிருந்து சளியை இருமி வெளியேற்ற வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி (HIV) பாதிப்பு உள்ளவர்களால் போதுமான அளவு சளியை வெளியேற்ற முடியாது. இதனால் பலருக்கு நோய் இருந்தும் கண்டறியப்படாமல் போகிறது. மேலும், சளியைச் சேகரிக்கும் போது காற்றில் கிருமிகள் பரவும் அபாயமும் அதிகம். நாக்கு பஞ்சுருட்டு (Tongue Swabs) - புதிய புரட்சி: இது ஒரு மென்மையான பருத்தி குச்சியைக் (Swab) கொண்டு நாக்கின் மேல் பகுதியை (Dorsum) தேய்த்து எடுக்கும் முறையாகும். எவ்வாறு செயல்படுகிறது? காசநோய் கிருமிகள் நுரையீரலில் இருந்தாலும், அவை வாய் வழியாக வெளியே வரும்போது நாக்கின் மேல்பரப்பில் படிகின்றன. இந்தத் துடைப்பத்தில் உள்ள கிருமிகளின் டி.என்.ஏ-வை (DNA) நவீன மூலக்கூறு கருவிகள் மூலம் கண்டறியலாம். இதனால் ஏற்படும் நன்மைகள், வலி இல்லாதது. இருமிச் சளியை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் ஏற்றது. சளி எடுக்க முடியாத முதியவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். வேகமானது. 2026-ன் புதிய கருவிகள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் (Near point-of-care) முடிவுகளைப் பெறலாம். பாதுகாப்பானது கிருமிகள் காற்றில் பரவும் அபாயம் இதில் மிகக் குறைவு. "TB-யை வெல்வோம்!" - மார்ச் 24 உலக காசநோய் தினம் - நாம் மாற வேண்டிய நேரம் இது! மூலக்கூறு சோதனைகள் (Molecular Tests): இப்போது வந்துள்ள புதிய கருவிகள் உதாரணமாக MiniDock MTB Test மிகவும் சிறியவை மற்றும் கையடக்கமானவை. இவை ஆய்வகங்களுக்குப் போகாமலேயே, நோயாளியின் அருகிலேயே வைத்துச் சோதனையை முடிக்க உதவுகின்றன. 2026-ஆம் ஆண்டு மார்ச் 24-ல் WHO இதனை அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது. #காச நோய் குணமாக