Follow
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
16,801
Posts
62,247
Followers
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
0 view
10 hours ago
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏறிய பெண்களிடம் பேருந்து நடத்துநர் ஒருவர் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், நிலைமை மேலும் மோசமடையும் முன் இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் தலையிட்டு நடத்துநரை எதிர்த்துள்ளார். இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பு, பொது இடங்களில் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது மற்றும் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதன் அவசியம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது சரியான நேரத்தில் தலையிட்ட அந்த இளைஞரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். “தவறைக் கண்டு மௌனம் காப்பது தவறுக்கு துணை போவதற்கு சமம்; உரிய நேரத்தில் துணிந்து குரல் கொடுப்பது மாற்றத்தை ஏற்படுத்தும்” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Awerness Video #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #📺உள்ளூர் தகவல்கள்📰
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
616 views
10 hours ago
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பூவரசிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அக்‌ஷயன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..... வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணமும் செய்து கொண்டதாக தெரிகிறது. பிறகு பூவரசி வீட்டிற்கு சென்று இளைஞன் முறைப்படி பெண் கேட்டதற்கு மறுத்து விட்டார்களாம்.. அதுக்காக லாட்ஜில் ரூம் போட்டு இப்படியா செய்வது? மொத்த பல்லடமும் அதிர்ந்து கிடக்கிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனியார் கம்பெனி செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் தனலட்சுமி.. 42 வயதாகிறது... உள்ளூர் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களது 22 வயது மகள் பூவரசி, டூ வீலர் கம்பெனியில், சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். திருப்பூர் பல்லடம் ஜோடி இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அக்சயன் என்பவருடன் பூவரசிக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது.. அக்‌ஷயனுக்கு 27 வயதாகிறது.. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி MCA 2ம் ஆண்டு படித்து வருகிறார். அக்‌ஷயனுக்கும் பூவரசிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இன்ஸ்டாகிராம் பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பூவரசி - அக்‌ஷயன் காதல் ஒருகட்டத்தில் 2 பேருமே, தங்களது பெற்றோருக்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பூவரசியின் பெற்றோரைச் சந்தித்த அக்‌ஷயன், பூவரசியுடன் திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி வலியுறுத்தியும் வந்துள்ளார்.... பேருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், இந்த திருமணத்திற்கு பூவரசியின் தாய் தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை, அம்மா கடுமையாக எதிர்ப்பதால், பூவரசியும் அக்ஷயனுடனான காதலை துண்டித்துவிட்டு அவரிடமிருந்து விலக தொடங்கியுள்ளார். தனலட்சுமியுடன் தகராறு காதலி தன்னைப் புறக்கணிப்பதாலும், அவரது அம்மா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாலும் கடும் ஆத்திரமடைந்த அக்ஷயன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பல்லடத்திற்கு வந்துள்ளார்.. அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். தினமும் பூவரசியின் வீட்டிற்கு சென்று, தன்னைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனலட்சுமியிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையும் வழக்கம்போல பூவரசியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அக்சயன், பூவரசியை உடனடியாகத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு தனலட்சுமி மீண்டும் திட்டவட்டமாக மறுக்கவே, ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அக்சயன் வீட்டின் வெளியே விறகு வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து வந்து தனலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.... செக்யூரிட்டி அப்பா எஸ்கேப்.. அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பூவரசி, அவரைக் காப்பாற்ற தடுத்துள்ளார். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய அக்ஷயன், பூவரசியையும் இரக்கமின்றி அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாய், மகள் இருவருமே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது அப்பா பழனிசாமி, வழக்கம்போல செக்யூரிட்டி வேலைக்கு சென்றுவிட்டதால், நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார். வீட்டிற்குள்ளிருந்து எழுந்த அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உள்ளே தாய்-மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தப்பிச் செல்ல முயன்ற கொலையாளி அக்சயனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து, கயிறால் கட்டிப்போட்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.... லாட்ஜில் ரூம் தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்சயனைக் கைது செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். . குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளைக் காதலனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது...!! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴