Follow
R.BABU
@23446003
1,445
Posts
28,578
Followers
R.BABU
648 views
6 days ago
ஓம் நமச்சிவாய திருவண்ணாமலை கிரிவலம் ஒரு அருமையான பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
574 views
6 days ago
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒரு அறிவிப்பு ஒரு அருமையான பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
697 views
11 days ago
சோமவார பிரதோஷம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சோமவார பிரதோஷ நாளில் (இன்று) சிவ தரிசனம் செய்யலாம்.   சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை  தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.  மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். பிரசாதம் பெற்று விரதத்தை  முடிக்கலாம்.   அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.    கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன்  மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.   பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து  பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய்  விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு. நன்றி #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
1.3K views
15 days ago
அருமையான ஆன்மீக பதிவு ராமன் ஆவணி அன்று செய்யும் #🌻வாழ்த்துக்கள்💐 வழிபாடு முறை ஒரு பதிவு
R.BABU
685 views
16 days ago
*திருமதி. துர்கா ஸ்டாலின் 108 பிராமண சுமங்கலி பெண்களுக்கு செய்வதை பாருங்கள் இதை தான் திராவிடம் ஆரியத்திடம் பக்தி செய்வது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாவங்களை போக்க ஐயர் வீட்டு பெண்களை வைத்து சுமங்கலி பூஜை கன்னிப் பெண்ணுக்கு பூஜை செய்தது ஏன் இந்த பூஜைக்கு திராவிட பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை வைத்து பூஜை செய்ய வில்லை ஏன் மற்ற ஜாதி பெண்களை வைத்து சுமங்கலி பூஜை இல்லை இவர்களுக்கு பூஜை செய்ய ஐயர் தேவை ஆனால் சாமானிய இந்துக்களுக்கு ஐயர் கூடாது இது தான் திராவிட மாடல் சமூக நீதி நம்புங்கள்* அருமையான திராவிட மாடல் துர்கா ஸ்டாலின் #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
1.2K views
17 days ago
MGR ஒரு அருமையான பாடல் ஸ்டாலின் தான் வராரு நல்லாச்சு தருவார் திராவிட மக்களாட்சி #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
1.1K views
17 days ago
இன்று யுகாதி பண்டிகை வசந்த காலத்தின் துவக்கமாக வும், புதிய வாழ்க்கையின் அடையாளமாகவும் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகி றது. இந்த புத்தாண்டு நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இது யுகாதி பண்டிகையின் முழு பலனையும், பல நன்மைகளையும் நமக்கு தருவதாகும். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி அல்லது உகாதி பண்டிகை மார்ச் 19ம் தேதியான இன்று கொண்டாடப் படுகிறது. புத்தாண்டு பிறக்கும் இந்த நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. யுகாதி சிறப்புகள் : சைத்ர மாதத்தில் வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை அனு சரிக்கப்படுகிறது. யுகாதி என்பது யுகம் + ஆதி ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையே ஆகும். அதாவது யுகம் தோன்றிய நாள் என்பது இதற்கு பொருள். புராணங்களின் படி, பிரம்ம தேவர் இந்த நாளில் தான் பிரபஞ்சத்தை படைக்க துவங்கினார் என நம்பப்படுகிறது. யுகாதியை இந்து புத்தாண்டாக வட இந்தியாவில் கொண்டாடு வது உண்டு. வாழ்வில் பழைய கசப்பான அனுபவங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை மறந்து, புதிதாக துவங்க வேண்டும் என உணர்த்துவதே யுகாதி பண்டிகையின் நோக்கமாகும். திருப்பதி, ஸ்ரீசைலம் போன்ற தலங்களில் இந்த நாளில் சென்று சாமி தரிசனம் செய்வது சிறப்பு. யுகாதி அன்று செய்ய வேண்டியவை : - வீட்டை சுத்தம் செய்து வண்ண வண்ண கோலங்கள், தோரணங்கள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். - வீட்டின் நிலைவாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். இது மங்களங்களை வீட்டிற்கு அழைக்கும் ஒரு சிறந்த செயலாகும். - சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, புதிய ஆடைகள் அணிந்து, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வரவேற்கும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். - யுகாதி அன்று மறக்காமல் பச்சடி செய்து அனைவருக்கும் பரிமாற வேண்டும். - முதலில் யுகாதி பச்சடியை சாப்பிட்ட பிறகே மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். யுகாதி பச்சடி என்பது ஆறு வகையான சுவைகளை கொண்டதாகும். - யுகாதி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் பஞ்சாங்கம் படிப்பது. இந்த நாளில் பஞ்சாங்கம் படிப்பதும், கேட்பதும் மிகவும் சிறப்பானதாகும். சொல்ல வேண்டிய மந்திரம் : புத்தாண்டின் துவக்க நாள் என்பதால் யுகாதி அன்று "ஓம் நமோ நாராயணாய" அல்லது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சிறப்பானது. இது ஆரோக்கியம், அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல்களை தரும். அன்றைய தினம், "ஓம் கம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்து வழிபடுவது தடைகள் நீங்கி, வெற்றிகளை தரும். நன்றி இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
151.9K views
17 days ago
ஒரு அருமையான குழந்தை காமெடி #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
1.5K views
17 days ago
இன்று பங்குனி மாத கிருத்திகை 2026 மார்ச் 23 (பங்குனி 09, திங்கள்) இன்று பங்குனி மாத கிருத்திகை நட்சத்திரம் ஆகும். முருகப் பெருமானுக்கு உகந்த இந்த நாளில், சிறப்பு விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் எதிர்ப்புகள் நீங்கி, மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். கிருத்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது முருகனின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்யும். எந்த ஒரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் இருக்கும் நாளே கார்த்திகை நட்சத்திர நாளாக கருத வேண்டும். கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உட்கொண்டு அன்று இரவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து நீராடி முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. உணவு உட்கொள்ள வேண்டிய உடல்நிலை கொண்டவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். கார்த்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த கார்த்திகை தினத் தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் மிகுந்த புண்ணிய பலன்களை செய்பவருக்கு கொடுக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகள் அணுகாமை, உடல் மற்றும் மன நலம், நன்மக்கட் பேறு, செழிப்பான பொருளாதார நிலை போன்றவை முருகனின் அருளால் ஏற்படும். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் வரை மேற்கொள்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் கிடைக்க பெற்று, மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள் என்பது ஆன்றோர்களின் வாக்காகும். பங்குனி மாத கிருத்திகை நாளில் விரதமிருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும், நினைத்த காரியம் கைகூடும், எதிர்ப்புகள் விலகும். இன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வது சிறந்தது நன்றி #🌻வாழ்த்துக்கள்💐
R.BABU
760 views
17 days ago
பங்குனி வளர்பிறை சஷ்டி அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும் மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே. பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடு கள் செய்வதற்கும் ஒருசிறந்த மதமாக இருக்கிறது.எனவே இந்த பங்குனி மாதத்தில் வரு கின்ற சஷ்டி தினங்கள் மகத்து வம் மிக்கதாக கருதப்படுகின் றன. அதிலும் இன்றைய சஷ்டி தினம் செவ்வாய்க்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பாகும்.. பங்குனி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி,நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும். இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். நோய் நீங்கும்: நீண்ட நாட்களாக தீராத நோய்கள் இந்த நாளில் விரதமிருந்தால் குணமாகும் என நம்பப்படுகிறது. திருமண யோகம்: திருமணத் தடைகளால் அவதிப்படுபவர்கள் முருகனை வழிபட, விரைவில் திருமண யோகம் கூடி வரும். குழந்தை பாக்கியம்: நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் பலன் கிடைக்கும். வெற்றி: எதிரிகளின் தொல்லை நீங்கி, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.ஏழ்மை நிலை அறவே நீங்கும் நன்றி #🌻வாழ்த்துக்கள்💐