புரட்டாசி ஸ்பெஷல் 07🌲
*********************************
🌹நாலாயிர திவ்ய பிரபந்தம்
***********************************
🚩சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து
உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்
றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே
🌹விளக்கம்:
🔸சதுரம் என்றால் நான்குபக்கம் என்று மட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு. சதுர மா மதிள் = சாமார்த்தியமாகக் கட்டப்பட்ட சிறந்த மதில்கள்.
🔸சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களா ல் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலை வனாக (இறைவன் என்பார்கள் அரசனை கம்பன் பலமுறை இச்சொல்லை பயன் படுத்தி இருப்பான்) திகழ்ந்த ராவணன்;
🔸அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான்.
🔸யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.
🔸இந்த அரங்க நகருள் பெரிய அல்லது சிறந்தவண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன.
🔸இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது.
🔸இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள உதர பந்தம் எனில் தாமோ தரனான (யசோதை கயிற்றினால்; வயிற் றில் கட்டியபோது உண்டான தழும்பு) அவன் வயிற்றுத்தழும்பு எனவும் கொள்ளலாம்.
🔸இன்றும் அரங்கனின் திருமஞ்சனத்தி ன் ப்போது இதைக்கண்டு சேவிக்கலாம். அது அப்படியே என் உள்ளத்தில் உலாவுகின்றது.
🌹 ஶ்ரீரங்கா.. ஶ்ரீரங்கா....
🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏#🤔 ஆன்மீக சிந்தனைகள்#🙏ஆன்மீகம்#🙏பெருமாள்
புரட்டாசி ஸ்பெஷல் 06🌲
*********************************
🌹நாலாயிர திவ்ய பிரபந்தம்
***********************************
🚩மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ண ப்பம்
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட
அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே
🌹விளக்கம்:
🔹மைபோல் கருத்த நிறத்தை உடைய சிறந்த மலர்களை அணிவத ற்கு உரிய கூந்தலையுடையவளே!
🔹பிராட்டியே அடியேன் பணிவுடன் கூறுவது என்னவென்றா ல் பெருமாளோடு இன்பத் துன்பங்களை ஒத்தி ருக்கப் பெற்றவன் என்ற கீர்த்தியையுடைய
🔹வானரஅரசன் சுக்ரீவன், இராமபிரானோடு கூட அமர்ந்து உங்களைத் தேடும்படி நாலா புறமும் வானர படை வீரர்களை அனுப்ப,
🔹உங்களை பிரிந்தபின் உணவும் உறக்கமும் கொள்ளாமலும், அமர்ந்திருக்கு ம் போது ஏதாவது தன்னைக் கடித்தாலும் தன் மேல் ஊர்ந்து போனாலும் அதை உணராமலு ம், தனக்கு விருப்பமான எந்த பொருளைப் பார்த்தாலும் உங்களையே நினைத்துக் கொ ண்டும் அந்த நிலைக்குத் தக்க உங்கள்மேல் அன்பென்னும் குணத்தையுடைய
🔹அயோத்தி மக்களுக்கு அரசனான பெருமாள் அடையாளங்கள் இவை இவை என்று அடியேனிடத்தில் சொல்லியருளினான்
#🙏பெருமாள்#🛕புரட்டாசி மாதம் வழிபாடு#🙏ஆன்மீகம்#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏#🤔 ஆன்மீக சிந்தனைகள்
🔹இப்படியாக இவை எனக்கு தெரிய வந்தன. (இதற்கு மேலும்) அடையாளம் இந்த இராம பிரானுடைய திருக்கையில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும்.
🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
🪔 🌲புpரட்டாசி ஸ்பெஷல் 05🌲
********************************
♦️♦️நாலாயிர திவ்ய பிரபந்தம்
**************************************
🚩வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
🌹பதவுரை
🔹வாரா அரு ஆய் வரும் என் மாயா= திருவுருவ த்தோடு வாராமல் அரூபியாய் உள்ளே வந்து தோன்றுகின்ற என் மாயவனே!
🔹மாயாமூர்த்தியாய் ஆராஅமுது ஆய்அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் = ஒரு நாளும் அழியாத தெய்வீக மங்கள உருவை உடையவ னே, எவ்வளவு அனுப வித்தாலும் தெவிட்டாத அமுதமாய், என் உள்ளுக்குள்ளே தித்தித்திருப்பவனே!
🔹தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திரு குடந்தை ஊரா = தொலையாத பாவ ங்களும் தொலையும்படியாக அடியேனை ஆண்டருளி னவனே திருக்குடந்தைப் பதியோனே!
🔹அடியேன் உனக்கு ஆள்பட்டும் இன்னம் உழல் வேனோ =அடியேன் உனக்கு அடிமைப் பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ.
🌹விளக்கம்:
🔺இப்பாசுரத்தில் எம்பெருமான் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி அரூபியாய் உள்ளே வந்து தோன்றியதை கூறுகிறார்.
🔺அதோடு தன் பாவங்களை இல்லாமல் செய்த தையும் கூறுகிறார். திருவுருவத் தோடு வாரா மல், அரூபியாய் வந்து தோ ன்றுகின்ற, அடியே னுடைய மாயவனே!
🔺ஒருநாளும் அழியாத(மாயாத) தெய்வீக மங்கள உருவை உடையவனே.(முதல் அடியில், முதலில் வரும் “மாயா” என்ற சொல் “மாயவ னே” என்றும் அடுத்து வரும் அதே சொல் “மாயாத” என்றும் பொருள்படும்).
🔺எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுத மாய் என் உள்ளே தித்தித்திருப்பவ னே! தொலையாத பாவங்களும் தொலை யும்படியா க அடியேனை ஆண்டருளினவ னே, திருக்குட ந்தைப்பதியோனே!
🔺அடியேன் உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ.
🌹ஓம் நமோ நாராயணாய...
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு#🙏பெருமாள்#🙏ஆன்மீகம்#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏#🤔 ஆன்மீக சிந்தனைகள்