Follow
👣Laddu boy👣
@312868075
3,857
Posts
15,730
Followers
👣Laddu boy👣
450 views
15 hours ago
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #good morning #காலை வணக்கம் . திருச்சிற்றம்பலம். ஆனந்த வைகாசி விசாகம் பொளர்ணமி தின ஆனந்த சிவ வணக்கம். நன்றி. சிவயாநம
👣Laddu boy👣
608 views
1 days ago
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 தசை நடப்பவர்கள் வணங்க வேண்டிய திருப்புறம்பியம் விநாயகர் ஆலயம். கேது பகவானின் மூலம் நமக்கு இன்னல்கள் ஏற்படாதிருக்க, விநாயகர் வழிபாடு நமக்கு மிகப் பெரிய வரப்ரசாதம். கேது தசை, கேது புக்தி நடப்பவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, பிரசித்திபெற்ற கணேச ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மை பயக்கும். திருவலஞ்சுழி வலம்புரி விநாயகர் அபரிமிதமான அருள் அலைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு , நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரும் அருளும் ஆலயம். இந்த ஊருக்கு வெகு அருகிலேயே உள்ளது இந்த திருப்புறம்பியம். கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன் கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார். விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது. "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தால் ஏழு கடல்களையும், ஒரு கிணற்றுக்குள் அடக்கினார் என்று புராணம் கூறுகிறது. ஆகவே பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த விநாயகர்" என்ற பெயர் ஏற்பட்டது. விநாயகரின் சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் ஆகியவை தெரியும். சங்கு, சிப்பிகளாலேயே ஆன சிலை என்று கூறுகின்றனர். இந்த பிள்ளையாருக்குத் "தேன் குடிக்கும் பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது. விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்கிறது. கேது தசை நடப்பவர்கள் சென்று வணங்கி வரவும் #குடும்பம் இனிய இரவு வணக்கம் #good night