Follow
நெல்லை செய்திகள்
@329712576
356
Posts
1,527
Followers
நெல்லை செய்திகள்
1.4K views
3 years ago
நெல்லை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் இசக்கிமுத்து இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் அங்கு விரைந்து சென்று இசக்கிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1.4K views
3 years ago
நெல்லையில் ஸ்ரீஅபிமுக்தேஸ்வரா் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் புராதனமான சிவன்கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் கோடகநல்லூா் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோயிலான ஸ்ரீஅபிமுக்தேசுவரர் திருக்கோவிலும் ஒன்றாகும். பழமைவாய்ந்த இத் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திக்கு மஞ்சள்பொடி மாப்பொடி வாசனைபொடி பால் தயிா் பஞ்சாமிருதம் தேன் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து மூலவா் சுவாமி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி அம்பாள் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு மலா்களால் அா்ச்சனை செய்து மகா தீபாரதனை நடைபெற்றது . இதில் திரளானபக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனா். #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
949 views
3 years ago
பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. நெல்லை ராமையன்பட்டி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது . இதில் அப்பகுதியை சேர்ந்த கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம் , பூச்சி மருந்து கொடுத்தல், சினை ஊசி போடுதல் ,உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இதில் கால்நடை மருத்துவர் பொன்வேல்துரை ஆய்வாளர் கிருஷ்ண குமாரி கால்நடை பராமரிப்பு உதவியாளர் லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1.1K views
3 years ago
நெல்லை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு விபரம் #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
931 views
3 years ago
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4- ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4- ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்திற்கு மாவட்ட செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன் துணைமேயர் ராஜு மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, உலகநாதன், சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அஅங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1K views
3 years ago
நெல்லையில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். சென்னை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் நெல்லையில் இருந்து ஆண்டு தோறும் வேண்டுதலாக காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம் இன்று ஐந்தாம் ஆண்டு நிகழ்வாக நெல்லையிலிருந்து மேளதாளம் முழங்க காவடி எடுத்து பாதயாத்திரை புறப்பட்டனர். இதில் 30 க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்துச் சென்றனர். மேலும் பாதயாத்திரைக்கு முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து அரோகர பக்தி கோஷங்களை முழங்கியவாறு புறப்பட்டு சென்றனர். #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1.5K views
3 years ago
வேளாங்கண்ணி பெருவிழாவை முன்னிட்டு நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்புரெயில் இயக்கப்படுகிறது . #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1K views
3 years ago
மனைவியை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த கணவர் கைது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த *ஆமினாபானு என்பவரை அவரது கணவர் செய்யது அலி நவாஸ் கான் என்பவர் மது போதையில் ஆமினா பானு மீது சந்தேகப்பட்டு அவரை அவதூறாக பேசி கையால் அடித்து காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆமினா பானு சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவன் விசாரணை மேற்கொண்டு மனைவியை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்த செய்யது அலி நவாஸ் கானை கைது செய்தார். #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
1.1K views
3 years ago
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டு பிடித்த காவலருக்கு பாராட்டு நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை கண்டுபிடிக்க காரணமாக இருந்த சைபர் கிரைம் காவலருக்கு பாராட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், இதுவரை மாவட்டத்தில் காணாமல் போன 317 செல்போன்களை *சைபர் கிரைம் இரண்டாம் நிலை காவலர் திரு.திவாகர்* என்பவர் துரிதமாக செயல்பட்டு மேற்படி காணாமல் போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்படி செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார். மேற்படி காவலரின் பணியினை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இரண்டாம் நிலை காவலர் திரு. திவாகர் என்பவரை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார் #திருநெல்வேலி_செய்தி
நெல்லை செய்திகள்
942 views
3 years ago
*மின்னல் டிரஸ்ட் சார்பில் பழைய பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்வெர்ட்டர், இதய துடிப்பு கண்டறியும் இயந்திரம், ரத்த அழுத்த பரிசோதனை கருவி, உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள் இந்நிகழ்வில் மின்னல் டிரஸ்ட் நிறுவனர் மில்லத் இஸ்மாயில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு பி.எம்.சரவணன் அவர்கள், துணை மேயர் திரு கே.ஆர்.ராஜூ அவர்கள், நெல்லை மண்டல தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர் #திருநெல்வேலி_செய்தி