ஃபாலோவ்
prithvi
@351483569
22
போஸ்ட்
11
பின்தொடர்பவர்கள்
prithvi
520 காட்சிகள்
பணத்திற்கு ஏற்றார் போல் கிடைப்பது பொருட்கள் மட்டுமல்ல.. நமக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையு ம் தான்.🕊️ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
prithvi
560 காட்சிகள்
ஒரே நாளில் யாரும் மௌனத்தை தேர்ந்தெடுப்பதில்லை அது பல நூறு வார்த்தைகளைப் பேசிப் பேசிப் பலனற்றுப் போனதால் ஏற்பட்ட மௌனம்.🕊️ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
prithvi
560 காட்சிகள்
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வருடங்களுக்கு முன் பழனி மலையில் நடந்த நிகழ்வு. முருகர் தரிசனம் ஆண்டிகோலத்தில் simple ஆக. கூட வந்த உறவினர்களுக்கு ஏமாற்றம். ராஜஅலங்காரத்தில் முருகனை தரிசிக்காமல், ஆண்டிகோலத்தில் பார்த்தல் அவ்வளவு சிறப்பு அல்ல என்று ஒரே வருத்தம். எந்த கோலத்தில் இருந்தாலும் முருகர் முருகர்தானே என்று சொன்னது எல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை. ஆழமாக முருகனாகிய கந்தனின் உட்பொருளே காந்த தத்துவம் என்று விளக்கினால்,புரிந்து கொள்ளும் சிந்தனை பக்குவம் இல்லை. தரிசனம் முடிந்து போகர் தரிசனம் முடிந்து, பிரகாரத்தில் அமர்ந்திருந்த போதும் இதே புலம்பல். அப்போது எங்கள் அருகில் அமர்ந்திருந்த காவி தரித்திருந்த பெரியவர் ஒருவர் மெல்லபுன்னகைத்தார். நல்ல தேஜஸ்.பளிச்சென்று இருந்தார். எங்களை பார்த்து நான் ஒரு எளிய விளக்கம் சொல்லட்டுமா? என்று கேட்டார். சொல்லுங்க சாமி " என்றார் எங்கள் உறவினர். ராஜ அலங்காரம் கண்ணுக்கு நிறைவாக இருக்கும். நமக்கு மகிழ்வை தரும். எப்படி நாம் உலக இன்பங்களிலேயே துய்த்து துய்த்து அதிலேயே ஆழ்ந்து போய், எப்படி நாம் இந்த உலகிற்கு வந்த நோக்கத்தை மறந்து இதுவே சாசுவதம் என்று நினைக்கிறோமோ அது போல. இது எல்லோரும் விரும்பும் வாழ்க்கை. எனவே மனம் அதில் லயிக்க விரும்புகிறது. ஆனால் ஆண்டிகோலம் எல்லா ஆசாபாசங்களையும் துறந்த மெய்பொருள் நிலை.ஆதிநிலை.துறவற நிலை. நாம் எங்கிருந்து இந்த உலகிற்கு வந்தோமே, அங்கேயே நம் பிறவியறுத்து சங்கமிக்க வேண்டும் என்று உணர்த்தும் தெய்வீக குறியீடு. மனதை உலக இன்பங்களை தவிர்த்து இறை தன்மையை உணர வைக்கும் அற்புத நிலை. ராஜ அலங்காரத்தில் நிகழ்கால வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்ந்து, நலமாக வாழும் போதே, நம் வாழ்வின் நோக்கம் பிறவி தொடர் அறுந்து இறைவனோடு ஒன்றென கலப்பதே என உணர்த்துவது ஆண்டிகோலம். எனவே இரண்டு நிலைகளையும் உணர்த்தவே ராஜ அலங்காரம், ஆண்டிகோலம் என்று புரிதல் கொள்ளுதல் சிறப்பு. எனவே ஆண்டிகோலத்தில் முருகரை தரிசிப்பதும் ஓர் ஆனந்தமே " என்று நிறைவு செய்தார். என்ன ஒரு அற்புதமான சிந்தனை விளக்கம். எல்லோரும் மெய்மறந்தோம். ஓம் சரவணபவ .....❤️❤️❤️🙏
prithvi
627 காட்சிகள்
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 புத்தரின் முகத்தில் நேரடியாக எச்சில் துப்பினான்... புத்தர் என்ன செய்தார் தெரியுமா?" (இந்தக் கதை உங்கள் வாழ்க்கையை மாற்றும் – முழுவதும் படியுங்கள்! 🙏) ஒரு கோபக்கார மனிதன் வந்தான். புத்தரின் போதனைகளால் அவன் மகன் சீடனாகி, வீட்டு வேலைகளை விட்டுவிட்டான். கோபத்தில் அவன் "புத்தரின் முகத்தில் எச்சில் துப்பினான்"! அக்காலத்தில் இது மிகப் பெரிய அவமானம் – போருக்கு சமம்! புத்தர் அமைதியாக தனது முகத்தை துடைத்துவிட்டு, புன்னகையுடன் கேட்டார்: ""அடுத்து என்ன?"" (What next?) அந்த மனிதன் அதிர்ந்து போனான்! ஏனென்றால், அவன் எதிர்பார்த்தது கோபம், சண்டை அல்லது பயம் – ஆனால் புத்தர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. சீடர்கள் (அனந்தா உட்பட) ஆத்திரத்தில் கொதித்தனர்: "குருவே! இவனை தண்டிக்க அனுமதியுங்கள்!" புத்தர் சீடர்களைப் பார்த்து அமைதியாக சொன்னார்: "அவன் என்னை அவமதிக்கவில்லை... அவன் தன்னிடம் இருக்கும் 'என்னைப் பற்றிய தவறான எண்ணம்' (his idea of me) மீது துப்பியிருக்கிறான். நீங்கள் என்னை நன்கு தெரிந்தும், இன்னும் கோபத்தில் ரியாக்ட் பண்றீங்க... அதுதான் என்னை உண்மையில் பாதிக்குது! மக்கள் செய்யும் தவறுகள், கோபங்கள் – அது "அவர்களின் உள் வலி, துன்பம், பயம்" பிரதிபலிப்பது மட்டுமே. உங்கள் மதிப்பை (your worth) பற்றியது அல்ல!" அடுத்த நாள்: அந்த மனிதன் இரவு முழுவதும் தூங்க முடியாமல், குற்ற உணர்ச்சியில் தவித்தான். மறுநாள் வந்து புத்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். புத்தர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. நேற்று நீ வேறு ஒருவனாக இருந்தாய் (கோபத்தில்). இன்று நீ வேறு ஒருவன். கோபம் உன்னுடையது அல்ல – அது உன் மனதின் ஒரு தற்காலிக நிலை மட்டுமே. நதியில் ஓடும் நீர் போல... 24 மணி நேரம் கழித்து அதே நீர் இல்லை. அதை ஏன் இன்னும் தூக்கிக்கொண்டு திரிகிறாய்?" "மிக முக்கியமான பாடம் (இன்றைய வாழ்க்கைக்கு):" - Social media-யில் யாராவது ட்ரோல் செய்தால்? - ஆபீஸில் boss கோபப்பட்டால்? - வீட்டில் யாராவது வார்த்தைகளால் காயப்படுத்தினால்? "எதையும் Personally எடுத்துக்கொள்ளாதீர்கள்!" நிறுத்துங்கள் → புரிந்துகொள்ளுங்கள் → "இரக்கத்தோடு" (compassion) பதிலளியுங்கள். ❤️ இந்தக் கதை ஓஷோ (Osho) சொன்ன பிரபல போதனை – ஆனால் அதன் ஆழம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை தொட்டிருக்கு! இந்தக் கதை உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது உதவியிருக்கா? அல்லது இப்போ இதை நினைவில் வைச்சுக்கலாமா? கமெண்ட்ல உங்க எண்ணத்தை பகிருங்கள்... இந்த ஞானம் அனைவருக்கும் பரவட்டும்! 🌟🙏 ஓம் நமச்சிவாயம் வாழ்க .....❤️❤️❤️🙏
See other profiles for amazing content