Follow
பால. கதிரவன்
@40896934
3,363
Posts
3,549
Followers
பால. கதிரவன்
512 views
1 days ago
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம் #தனியார் அல்லது அரசு மருத்துவர்கள் பெரும்பான்மையோர் முதலில் தனக்கென ஒரு சிறு அறையைக் கொண்ட மருத்துவகத்தினை துவங்கி நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவத்தினை அளித்து மிகக்குறைவான அளவில் மருந்துகளையும் எழுதி பொதுமக்களிடம் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். கூடிய விரைவில் தனக்கென ஒரு நோயாளிகள் கூட்டத்தினை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதன் பிறகு தனது மருத்துவகத்தினை விரிவாக்கம் செய்ய தனியாக இடம் சொந்தமாக வாங்கி அதில் தனது மருத்துவ மனையினை கட்டி முடித்த பின்னர் தனது சுயரூபத்தினை காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் நோயாளிகள் வாடிக்கையாளர்களாகவும் மருத்துவமனை மருந்து வியாபார நிறுவனமாகவும் மாறி விடுகிறது. நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாக எண்ணி எவ்வளவு கட்டணத்தினை பிடுங்க முடியுமோ பிடிங்கியும் எவ்வளவு மருந்துகளை விற்க முடியுமோ விற்றும் கல்லா கட்டுகிறார்கள். நோயாளிகளும் உயிருக்கு பயந்து அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே செல்கிறார்கள். தற்காலத்தில் நியாமான முறையில் சரியான மருத்துவ சிகிச்சை என்பது பொதுமக்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. சாதாரண வியாதி வந்தால் கூட லட்சத்தில் பணம் வேண்டுமே என்ற பயத்திலேயே ஏகப்பட்ட மக்கள் மருத்துவ மனைக்கு போகவே பயப்படுகிறார்கள். தற்போது ஆங்காங்கு பெரிய அளவில் மிக விரைவாக எழும்பும் மருத்துவமனை கட்டடங்களே இதற்கு சாட்சி